விஜய் பட இயக்குனரிடம் சமந்தா வைத்த வேண்டுகோள்

  • IndiaGlitz, [Friday,May 26 2017]

தென்னிந்தியாவின் பிரபல நடிகையான சமந்தா கையில் தற்போது ஆறு படங்கள் கைவசம் உள்ளது. அவருக்கும் தெலுங்கு பட நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் முதல் வாரம் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்குள் அவர் ஆறு படங்களையும் முடித்துவிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் சமந்தா தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது சமந்தா திருமணத்திற்கு பின்னரும் தனது நடிப்பை தொடரவுள்ளதாகவும், ஆனாலும் திருமணம், தேனிலவு என இடையில் சில காலம் அவர் பிரேக் எடுத்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். எனவே ஒருசில படங்களில் அவரது காட்சிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்துவிடுமாறு இயக்குனர்களிடம் சமந்தா தரப்பு வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இளையதளபதி விஜய்யின் 'தளபதி 61' படத்தை இயக்கிவரும் அட்லியிடம் தனது பகுதி காட்சிகளை விரைவில் முடிக்குமாறு சமந்தா கேட்டுக்கொண்டாராம். இதனால் அடுத்த மாதம் சென்னையில் விஜய்,சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். அதேபோல் ராம்சரண்தேஜாவுடன் நடிக்கும் படமும் வரும் ஆகஸ்ட் மாத்திற்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் திருமணம், தேனிலவு முடிந்தவுடன் நவம்பருக்கு பின்னர் மீண்டும் திரும்பும் சமந்தா, சாவித்ரி வாழ்க்கை வரலாறு படம், அநீதி கதைகள், இரும்புத்திரை உள்பட மற்ற படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஒரே படத்தில் இரண்டு வெற்றி பட இயக்குனர்கள்

விக்ரம் நடித்த 'சாமுராய்', பரத் நடித்த 'காதல்', தமன்னா நடித்த 'கல்லூரி, லிங்குசாமி தயாரித்த 'வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல். இவர் தற்போது இயக்கி முடித்துள்ள 'ரா ரா ராஜசேகர்' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது...

'தெறி'க்கு 147, 'தளபதி 61' படத்துக்கு 142: இது என்ன கணக்கு தெரியுமா?

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய், காஜல் அகர்வால் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்...

வெங்கட்பிரபுவின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த முழு தகவல்கள் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்....

சூர்யா உள்பட 8 நடிகர்களுக்கு பிடிவாரண்ட்: சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு

கடந்த 2009ஆம் ஆண்டு ஒரு நடிகையை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானதை எதிர்த்து கூட்டப்பட்ட கண்டன கூட்டத்தில் சூர்யா, சரத்குமார், சத்யராஜ் உள்பட 8 நடிகர்கள் பத்திரிகையாளர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தனர்.

'காலா' படத்தின் கலக்கலான ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வரும் 28ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் படத்தின் டைட்டில் 'காலா' என்பதை காலையில் பார்த்தோம்