close
Choose your channels

'காத்து வாக்குல ரெண்டு காதல்': சமந்தாவின் கேரக்டர் என்ன?

Wednesday, February 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஒரே படத்தில் நயன்தாரா, சமந்தா என இரண்டு முன்னணி நடிகைகள் விஜய் சேதுபதியுடன் நடிக்க இருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதை என்ன என்பதை இந்த படத்தின் டைட்டிலில் இருந்தே ஊகிக்க முடிவதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் என்ன? என்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சமந்தா கூறியுள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த படத்தின் கதை மிகவும் சுவாரசியமானது என்றும் நகைச்சுவை காட்சிகள் அதிகம் இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தனது கதாபாத்திரம் மிகவும் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பேட்டியில் இருந்து அவரது கேரக்டர் இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.