யாரிடமும் கெஞ்ச மாட்டேன்: சம்பள விவகாரம் குறித்து சமந்தா..!

  • IndiaGlitz, [Thursday,March 30 2023]

ஹீரோவுக்கு சமமான சம்பளம் வேண்டும் என்று எந்த தயாரிப்பாளரிடம் நான் கெஞ்ச மாட்டேன் என நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் ஆரம்ப காலத்தில் இருந்து ஹீரோவுக்கு ஒரு சம்பளம் ஹீரோயினுக்கு ஒரு சம்பளம் என்று பாகுபாடு காட்டி தான் சம்பளம் கொடுக்கப்படுவதாக பல நாயகிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ஹீரோவுக்கு சமமாக தாங்களும் நடிப்பதால் தங்களுக்கும் ஹீரோவுக்கு சமமான சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சமந்தா ’ஹீரோ ஹீரோயின் ஆகிய இருவருக்கும் சமமான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதற்காக நானும் போராடுவேன். ஆனால் என் கடினமான உழைப்பை பார்த்து, என்னுடைய படங்கள் அடையும் வெற்றியை பார்த்து, உங்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறோம் என்று தயாரிப்பாளர்கள் சிலர் முன்வந்து அதிக சம்பளம் கொடுக்கின்றனர். ஆனால் நான் ஹீரோவுக்கு கொடுக்கும் சம்பளத்தை எனக்கும் கொடுங்கள் என்று யாரிடமும் கெஞ்ச மாட்டேன்' என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சமந்தா நடித்த ’’சாகுந்தலம்’’ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்காக சமந்தா முழு வீச்சில் புரமோஷன் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அனுமதி மறுப்பு விவகாரம்.. வீடியோ வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர்.!

சென்னையில் உள்ள திரையரங்கில் இன்று சிம்பு நடித்த 'பத்து தல' என்ற திரைப்படம் வெளியான  நிலையில் இந்த படத்திற்கு டிக்கெட் வைத்திருந்த இரண்டு நரிக்குறவர் சமூக ரசிகர்களை தியேட்டர் நிர்வாகம் உள்ளே விட

'அகிலன்' உள்பட 4 தமிழ் படங்கள், மொத்தம் 14 படங்கள்.. இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போலவே ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

நந்தினி எனக்கு ஒரு ஸ்பெஷல் கேரக்டர்: PS 2' இசை விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய்..!

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் நந்தினி கேரக்டரில் நடித்த நடிகை ஐஸ்வர்யாராய் பேசியதாவது:

மணிரத்னம் காலத்தில் நானும் இருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை: சியான் விக்ரம்

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் ஆதித்த கரிகாலம் கேரக்டரில் நடித்த நடிகர் சியான் விக்ரம் பேசியதாவது: 

'ரஜினி சார் சொன்னது எனக்கு அப்போது புரியவில்லை, இப்போது புரிகிறது: 'PS 2' இசை விழாவில் கார்த்தி..!

 'பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த விழாவில் கார்த்தி பேசியதாவது: