close
Choose your channels

நாகசைதன்யாவை விவாகரத்து செய்தது ஏன்? முதல்முறையாக மனம் திறந்த சமந்தா!

Tuesday, June 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா, நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை முதன் முதலாக மனம் திறந்து கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

காபி வித் கரன் என்ற மிகப் பெரிய புகழ்பெற்ற நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட நடிகை சமந்தா, விவாகரத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரசியமாக பதிலளித்த சமந்தா கடைசியில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் அப்போது அவர் ஒரு கண்ணியமான பதிலை தந்ததாகவும் காபி வித் கரன் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிகழ்ச்சி ஜூலை 7ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்ய காரணம் என்ன என்பது தெரியவரும் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் அவர் சொன்ன பதில் ஒளிபரப்பப்படுமா? அல்லது எடிட் செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.