close
Choose your channels

வந்துவிட்டது பணமூட்டை... பணத்தோடு கிளம்பும் பிக்பாஸ் போட்டியாளர் யார்?

Tuesday, January 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனின் பண மூட்டை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சீசனிலும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஒரு போட்டியாளர் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே செல்லலாம் என்று அறிவிக்கப்படும். இதற்கு முந்தைய சீசன்களில் கவின், கேப்ரில்லா, சிபிச் சக்கரவர்த்தி ஆகியோர் பணமூட்டையை எடுத்துக்கொண்டு வெளியேறி உள்ளனர்.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, அசீம், அமுதவாணன் ஆகிய ஆறு பேர்களில் யாராவது ஒருவர் பணமூட்டையை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

முதல் கட்டமாக மூன்று லட்சம் பணமூட்டையில் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பணத்தின் மதிப்பு உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் இறுதி போட்டியில் தகுதி பெற்ற யார் பணமூட்டையுடன் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.