ஒரே ஒரு நன்றி சொல்ல அமெரிக்காவுக்கு பறந்த சமந்தா

  • IndiaGlitz, [Tuesday,April 03 2018]

திருமணத்திற்கு பின்னரும் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகை சமந்தா நடித்த 'ரங்கஸ்தலம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் கணவர் நாகசைதன்யாவுடன் சமந்தா அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள சென்ட்ரல் பார்க் அருகே கணவர் நாகசைதன்யாவுடன் எடுத்த செல்பி புகைப்படம் ஒன்றை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். பொதுவாக தனக்கு செல்பி எடுக்க பிடிக்காது என்றும் ஆனால் இந்த புகைப்படத்தில் ஒரு ஸ்பெஷல் இருப்பதாகவும், 8 வருடங்களுக்கு முன்னர் இதே இடத்தில் தான் தனக்கும் நாகசைதன்யாவுக்கும் காதல் தோன்றியதாகவும், அதற்கு நன்றி சொல்லும் விதமாக இந்த இடத்திற்கு மீண்டும் வந்து செல்பி எடுத்துள்ளதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார்.  இந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்குகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

சமந்தா தற்போது விஷாலுடன் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனுடன் 'சீமராஜா', விஜய்சேதுபதியுடன் 'சூப்பர் டீலக்ஸ் மற்றும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான 'நடிகையர் திலகம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் இந்த ஆண்டே வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஷாலினிஅஜித் பாதையில் பயணிக்க விருப்பம்: மிஷ்கின் பட நாயகி

மிஷ்கின், ராம் நடித்த 'சவரக்கத்தி' படத்தில் நடித்த நடிகை ஸ்வாதிஷ்டா தற்போது ஜீவா நடித்து வரும் 'கீ' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கஸ்தூரி கூறும் தல, தளபதியின் மைனஸ்களை ரசிகர்கள் ஏற்பார்களா?

நடிகை கஸ்தூரி படங்களில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் தனது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து அவ்வப்போது டிரெண்டிங்கில் இருப்பார்.

அஜித்தை அடுத்து பிரபல நடிகரின் படத்தில் அக்சராஹாசன்

ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சீயான் விக்ரம் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை 'தூங்காவனம்' இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கவுள்ளார் என்ற செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

தமிழக அரசை நம்புகிறோம்: தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

தமிழ் திரை உலகத்துக்காக நல வாரியம் மற்றும் அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகின்றோம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக அமைச்சரின் அதிரடி அறிவிப்புக்கு நன்றி கூறிய விஷால்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான 'திரைப்படத்துறைக்கு என தனி வாரியம்' வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து தேவைப்பட்டால் வாரியம் அமைக்கப்படும்