close
Choose your channels

இது எனது ஆசிர்வதிக்கப்பட்ட பயணம்: சமந்தாவின் நெகிழ்ச்சியான பயணம்!

Saturday, February 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா தனது 12 ஆஆண்ஊ திரையுலக பயணம் குறித்த நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை சமந்தா திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியான சிம்பு திரிஷாவின் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் சமந்தா ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் போன்ற ஹிட் படங்களில் நடித்தார்.

அதன்பின்னர் விஜய்யுடன் ‘தெறி’ ‘மெர்சல்’, சூர்யாவுடன் ’அஞ்சான்’ சிவகார்த்திகேயனுடன் ’சீமராஜா’ விஷாலுடன் ’இரும்புத்திரை’ விக்ரமுடன் ’10 எண்றதுக்குள்ள’ என முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார்.

இந்த நிலையில் தான் நடித்த முதல் திரைப்படமான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து இது குறித்து நெகிழ்ச்சியான பதிவை தனது சமூக வலைதளத்தில் சமந்தா பதிவு செய்துள்ளார்.

அதில், ‘இன்று நான் திரையுலகில் 12வது வருடத்தை நிறைவு செய்கிறேன். லைட் கேமரா ஆக்ஷன் போன்ற அருமையான தருணங்களுடன் 12 வருட இனிமையான நினைவுகளை நான் திரும்பி பார்க்கிறேன், இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பயணம் மற்றும் மிகச்சிறந்த ரசிகர்களை பெற்றதற்காக நான் அனைவருக்கும் நன்றி சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.