close
Choose your channels

பின் தொடர்ந்த ரசிகரை எச்சரித்த சமந்தா: வைரலாகும் வீடியோ

Friday, February 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் சமந்தா. திருமணத்திற்கு பின்னரும் தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, கடந்த ஆண்டு நடித்த சூப்பர் டீலக்ஸ், மஜ்ஜிலி மற்றும் ஓபேபி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான 96 படத்தின் ரீமேக் படமான ’ஜானு’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமந்தா தற்போது அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம், விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களிலும் ஒரு வெப்சீரிஸ்ஸிலும் நடித்து வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றார். ஏழுமலைகளையும் கடக்க அவர் நடந்து சென்றுகொண்டிருந்த போது ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்தனர். ஒருசிலர் அனுமதி பெற்று செல்பியும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஒரு ரசிகர் நீண்ட நேரமாக சமந்தாவை பின்தொடர்ந்து அவரை தொடர்ச்சியாக வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இதனை பார்த்து கடுப்பான சமந்தா ’நடந்தா ஒழுங்கா நட, இந்த வீடியோ எடுக்குற வேலையெல்லாம் வச்சிக்காத’ என்று எச்சரித்தவுடன் அந்த ரசிகர் அமைதியாக நடந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.