சூடு பிடித்தது சமுத்திரக்கனியின் 'தொண்டன்' வியாபாரம்

  • IndiaGlitz, [Thursday,April 20 2017]

சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'அப்பா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன நிலையில் அவர் இயக்கி நடித்துள்ள அடுத்த படம் 'தொண்டன். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.
சமூக கருத்துக்களுடன் கூடிய 'தொண்டன்' திரைப்படம் வரும் மே 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வசுந்தரதேவி சினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் சேலம் பகுதி ரிலீஸ் உரிமையை சமுத்திரக்கனியே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமுத்திரக்கனி, விக்ராந்த், சுனைனா, சூரி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் ரமேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தினகரனை தேடி வந்த டெல்லி போலீஸ். தீக்குளிக்க முயன்ற தொண்டரால் பரபரப்பு

தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்காக டிடிவி தினகரனிடம் சம்மன் அளிக்க நேற்று இரவு டெல்லி போலீசார் சென்னைக்கு வந்தனர்...

சமந்தா எடுத்துள்ள புதிய சவால். ஒரு ஆச்சரிய வீடியோ

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய சமந்தா தற்போது பிசியான நடிகைகளில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தற்போது விஜய்யுடன் 'தளபதி 61', விஷாலுடன் 'இரும்புத்திரை', விஜய்சேதுபதியுடன் 'அநீதி கதைகள்' மற்றும் ஒருசில தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார்...

டுவிட்டரை தெறிக்கவிட்ட சிம்பு ரசிகர்கள். ஒரே நாளில் 20 ஹேஷ்டேக்குகள்

சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் இரண்டு பாகங்களில் வெளிவரும் என்றும், சிங்கிள் பாடல் விரைவில் வெளிவருகிறது என்றும், நேற்று வெளியான தகவலால் டுவிட்டர் தெறிக்க ஆரம்பித்தது...

ஜெயலலிதா பங்களா அருகே ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பரபரப்பு

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது அவ்வபோது ஓய்வு எடுக்கும் இடம் சிறுதாவூர் பங்களா என்பது அனைவரும் அறிந்ததே. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்த பங்களா, அவர் உயிருடன் இருந்தவரை கடும் பாதுகாப்பில் இருந்தது...

மணிரத்னம், முருகதாஸ், பாலா வெளியிடும் எச்சரிக்கை

கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ், பாலா ஆகியோர் இணைந்து ஒரு படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடுகின்றனர். அந்த படத்தின் பெயர் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்'...