close
Choose your channels

5 மொழி திரைப்படத்தில் ப்ரியா பவானிசங்கரை அடுத்து இணைந்த பிரபல இயக்குனர்

Saturday, March 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு நடிக்க இருக்கும் திரைப்படம் ஒன்று, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகவுள்ளது என்பதையும் இந்த படத்தில் பிரபல நடிகை ப்ரியா பவானிசங்கர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் ’அகம் பிரம்மாஸ்மி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தற்போது பிரபல தமிழ் இயக்குனர் மற்றும் நடிகருமான சமுத்திரக்கனி இணைந்துள்ளார். இதனை இந்த படத்தின் ஹீரோ மனோஜ் மஞ்சு தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். சமுத்திரக்கனி அவர்கள் தங்கள் படத்தில் நடிக்க இருப்பதை வரவேற்பதாகவும் அவருடைய கேரக்டர் இன்னும் சில வருடங்களுக்கு பேசப்படும் கேரக்டராக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் இந்த படத்தில் நடிக்க இருக்கும் ஒரு சில பிரபலங்கள் குறித்து அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேபி நிவாரணா இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 11ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

ஏற்கனவே சமுத்திரக்கனி, பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்ற தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.