சிம்புவின் 'AAA' படத்தில் இணைந்த 4வது நாயகி

  • IndiaGlitz, [Thursday,March 30 2017]

நடிகர் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இந்த படத்தில் சிம்பு மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா மற்றும் ஸ்டைலிஷ் இளைஞர் ஆகிய வேடத்தில் நடித்து வருகிறார்
இந்த படத்தில் ஸ்ரேயா, தமன்னா ஆகியோர் நாயகிகளாக நடித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் நீதுசந்திரா மூன்றாவது நாயகியாக இணைந்ததாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தற்போது நான்காவதாக ஒரு நாயகி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை சனாகான்' தான் அந்த நான்காவது நாயகி. இவர் இந்த படத்தில் கேங்ஸ்டர் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

More News

நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் கமல், ரஜினி கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கும் தயாரிப்பாளர்

தென்னிந்திய நடிகர்சங்கத்தின் புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டுவிழா வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கான அழைப்பிதழ் முறைப்படி அடிக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது...

சுந்தர் சி-யின் 'சங்கமித்ரா'வில் இருந்து திடீரென விலகிய முக்கிய பிரமுகர்

பிரபல இயக்குனர் சுந்தர் சியின் கனவுப்படமும், பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பிரமாண்டமான படமுமான 'சங்கமித்ரா' இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது...

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக '2.0' நாயகி பிரச்சாரம்? காரணம் தொப்பியா?

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறந்து கொண்டு வரும் நிலையில் பிரபல நடிகையும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தின் நாயகியுமான எமிஜாக்சன் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது....

சென்னையில் ரஜினியை சந்திக்கின்றாரா மலேசிய பிரதமர்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது மலேசிய பிரதமர், மலாக்கா ஆளுனர் ஆகியோர் ரஜினியை வரவேற்று விருந்தளித்தனர் என்பது தெரிந்ததே...

செம்மர கடத்தல் வழக்கு. நடிகை சங்கீதா கைது

செம்மரக்கடத்தலில் உடந்தையாக இருந்ததாக விமான பணிப்பெண்ணும் முன்னாள் நடிகையுமான சங்கீதா கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்...