close
Choose your channels

நீ வெளியில வாடா இப்ப: சுரேஷிடம் சனம் ஆவேசம்

Wednesday, October 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அரக்கர்கள், ராஜ வம்சம் டாஸ்க்கில் நேற்று சுவராசியம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் இன்று சுவராசியம் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இன்றைய டாஸ்கின் போது ஆஜித்தை அரக்கர்கள் சுற்றி வளைத்ததோடு ஆஜித்தை அசைய வைக்க முயற்சித்து வருகின்றனர். அப்போது ஆஜித் மீது சனம் ஸ்ப்ரே அடித்ததால் கடுப்பான சுரேஷ், ஒரு கட்டையால் சனம் ஷெட்டியை தாக்குகிறார்.

இதனால் ஆவேசமான சனம், ‘நீ வெளியில வாடா என்று அவர் ஆவேசமாக பேச, சுரேஷ் அதற்கு அரக்கர் போல் சிரித்து வெறுப்பூட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில் இந்த டாஸ்க் மூலம் போட்டியாளர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுத்த வேண்டுமென்ற பிக்பாஸின் எண்ணம் நிறைவேற்றி விட்டது

இன்றைய நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்பது மட்டுமின்றி வரும் சனிக்கிழமை கமல் முன்னிலையில் இதுகுறித்து ஒரு பெரிய பஞ்சாயத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.