புலிக்கு பிறந்தது பூனையாகுமா? விஜய் பட பாடலுக்கு சாண்டி மகள் லாலாவின் நடன வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,May 29 2021]

பிரபல டான்ஸ் மாஸ்டர் மற்றும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர், சில்வியா என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு சாண்டி-சில்வியா தம்பதியினர் ’லாலா’ பெயர் சூட்டினர். குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விட்டதால் அவர் குழந்தையை நினைத்து அடிக்கடி ஏங்கிக் கொண்டிருக்கும் காட்சிகளும் அந்த பிக் பாஸ் சீசனில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிக்பாஸ் வீட்டிற்கு லாலாவும் அவருடைய தாயாரும் வந்தபோது சாண்டி மாஸ்டர் உணர்ச்சிவசப்பட்டது அந்த நிகழ்ச்சியின் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் லாலா பாப்பாவின் பிறந்த நாள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. தற்போது லாலா பாப்பாவுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் கற்றுக் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்

இந்த வீடியோவில் தளபதி விஜய் நடித்த ’தெறி’ படத்தில் விஜய்யும் மீனாவின் மகளும் நடனமாடும் பாடலுக்கு தனது மகளுக்கு அவர் நடனம் சொல்லிக் கொடுக்கிறார். சாண்டி மாஸ்டரை போலவே அவரது மகள் சூப்பராக நடனமாடுவதை பார்த்த அவரது ரசிகர்கள், ‘புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதை அவர் நிரூபித்துவிட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

நீ ஒரு மினி சகலகலா வல்லவன்: வெங்கட் சுபா மறைவு குறித்து டி.சிவாவின் உருக்கமான பதிவு!

நடிகர், தயாரிப்பாளர், சினிமா விமர்சகர் வெங்கட் சுபா அவர்கள் இன்று அதிகாலை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

என் தந்தையை நான் நம்புகிறேன்: மதன் கார்க்கி

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு கேரளாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான ஓ.என்.வி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

2021 ஐபிஎல்- எஞ்சிய போட்டிகள் நடக்குமா? பிசிசிஐ சொல்வது என்ன?

ஐபிஎல் போட்டியின் 14 ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி கோலாகலாமாகத் துவங்கியது.

எனது கோரிக்கையை ஏற்ற முதல்வருக்கு பாராட்டுக்கள்: கமல்ஹாசன்

எனது கோரிக்கையை ஏற்ற முதல்வருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கமல்ஹாசன் ட்விட்டரில் கூறியுள்ளார்

ஓ.என்.வி. விருதை மதிப்புடன் திருப்பி அளித்த வைரமுத்து...!

இலக்கியத்திற்காக வழங்கப்படும் ஓ.என்.வி. விருதை  திருப்பி அளிக்கிறேன்,