கிரிக்கெட் வீரர்களுடன் சாண்டி மாஸ்டர் டான்ஸ்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Thursday,April 29 2021]

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 8 அணிகள் மோதும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி ஜூன் 4-ஆம் தேதி தொடங்கும் என்றும் அந்த போட்டிகள் ஜூலை மாதம் 4-ஆம் தேதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளில் ஒன்றான நெல்லை ராயல் கிங்ஸ் என்ற அணிக்காக புரமோஷன் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. சாண்டி மாஸ்டரின் நடன இயக்கத்தில் உருவாகும் இந்த பாடல் குறித்த வீடியோவை சாண்டி மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவுசெய்துள்ளார்.

கிரிக்கெட் மைதானத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் வீரர்களுடன் சாண்டி நடனமாடும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாடல் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

மனைவி, மகனுடன் இயக்குனர் விஜய்: வைரல் புகைப்படங்கள்

அஜித் நடித்த 'கிரீடம்' விஜய் நடித்த 'தலைவா' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் கடந்த 2019ஆம் ஆண்டு டாக்டர் ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்தார்.

விரைவில் சூர்யாவின் அடுத்த படத்தின் பாடல்கள்: இசையமைப்பாளர் தகவல்!

சூர்யாவின் அடுத்த படத்தின் பாடல்கள் தயாராகி வருவதாகவும் விரைவில் பாடல்கள் வெளியாகும் என்றும் இசையமைப்பாளர் தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்ததை அடுத்து ரசிகர்கள் குஷியில் உள்ளனர் 

2021 ஐபிஎல் கோப்பை சிஎஸ்கே வுக்கா? விளக்கம் அளிக்கும் நிபுணர் வீடியோ!

2021 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா பரவலுக்கு இடையிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரெம்டெசிவர் வாங்க போனேன்....!கொரோனா வாங்கி வந்தேன்...! சென்னையில் தொற்று பரவும் அபாயம்...!

சென்னையில் நோய்த்தொற்றை தடுக்கும் ரெம்டெசிவர்  மருந்து வாங்க சென்றவர்களுக்கு கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகி உள்ளது.

24 மணி நேரத்தில் 500 மிரட்டல்கால்கள்: தமிழ் ஹீரோ அதிர்ச்சி தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் தனக்கும் தன்னுடைய குடும்பத்தினர்களுக்கும் 500க்கும் மேற்பட்ட மிரட்டல் கால்கள் வந்திருப்பதாக தமிழ் ஹீரோ ஒருவர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது