விஜய் லெவலுக்கு விஜய்சேதுபதி மாஸ் ஆகிவிட்டார்: பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,November 16 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்’ திரைப்படம் நேற்று வெளியாக இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாக நேற்று இரவு ஒரு சில திரையரங்குகளிலும், இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கிடைத்து வரும் நிலையில் இந்த படத்தின் இயக்குநர் விஜய் சந்தர் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில் இந்த படம் குறித்து அவர் கூறும்போது ’இந்த படத்தின் ஸ்கிரிப்ட் தயாரான போதே மாஸ் ஸ்கிரிப்ட்டாகத்தான் தயாரானது. இந்த ஸ்க்ரிப்டை முதலில் தெலுங்கில் ஒரு பிரபல தயாரிப்பாளருக்காக எழுதினேன். அவரும் இந்த திரைப்படத்தில் பவன் கல்யாணை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். எனவே பவன் கல்யானுக்கு ஏற்றவாறு திரைக்கதையை அமைத்தேன். இந்த படம் தமிழில் தயாரானால் விஜய் போன்ற மாஸ் நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் கருதப்பட்டது.

இந்த நிலையில் ஸ்கிரிப்ட் எழுதும் பணி முடிந்தவுடன் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்காக ஒப்பந்தமானார். அதன் பின்னர் விஜய்சேதுபதியின் ஸ்டைலுக்காக இந்த கதையி, மற்றும் வசனத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது.

தற்போது விஜய்க்கு இணையாக விஜய்சேதுபதி மாஸாக இருப்பதால் அவருக்கு இந்த கதை பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டு அவருக்கு ஏற்றவாறு ஒரு சில மாற்றங்கள் செய்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம் என்று விஜய் சந்தர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More News

ஒரே படத்தில் நயன்தாரா மற்றும் சோனம்கபூர்!

கொரியன் திரைப்படமான 'பிளைண்ட்' என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படம் ஒன்றில் நடிகை நயன்தாரா நடித்து வருவதாகவும் இந்த படத்திற்கு 'நெற்றிக்கண்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும்

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த 'அசுரன்' பட நடிகர்

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஏற்கனவே கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றனர்.

போனிகபூரை திடீரென சந்தித்த நயன்தாரா: வலிமை நாயகியா?

அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான 'வலிமை' என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே.

மகன் திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் பரிதாபமாக பலியான தந்தை!

மகனின் திருமணம் நடைபெற ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் நடந்த ஒரு எதிர்பாராத சம்பவத்தால் தந்தை மரணம் அடைந்த சோக நிகழ்ச்சி  இந்தூர் அருகே உள்ள உஜ்ஜயின் என்ற கிராமத்தில் நடந்துள்ளது 

டெல்லி ஓட்டலில் திருமணமான இளம்பெண் படுகொலை! ஃபேஸ்புக் காதலன் காரணமா?

டெல்லி ஹோட்டல் ஒன்றில் திருமணமான இளம் பெண் மர்மமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது