அட்லியின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்

  • IndiaGlitz, [Sunday,May 07 2017]

'ராஜா ராணி', 'தெறி' ஆகிய இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி, தற்போது இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அட்லி தயாரித்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ/ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் அட்லியின் முதல் தயாரிப்பு படமே தமிழக அரசின் வரிவிலக்கு சலுகைக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க்கது. மேலும் இந்த படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா, ராதாரவி, தம்பி ரமையா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ike இயக்கி வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இன்று இந்திய சினிமா சரித்திரத்தின் பொன்னாள்: 'பாகுபலி'யால் கிடைத்த கெளரவம்

100 வருட இந்திய சினிமா சரித்திரத்தில் ஒரு திரைப்படம், அதுவும் ஒரு தென்னிந்திய திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றதோடு முதல்முறையாக ரு.1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இந்த பெருமையை இந்திய சினிமாவுக்கு கொடுத்த படம் 'பாகுபலி 2'...

விஷால்-கார்த்திக் கூட்டணியில் இணைந்த பிரபல தயாரிப்பாளர்-நடிகர்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிரபுதேவா இயக்கும் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' திரைப்படத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் கிடைத்த சம்பள பணம் முழுவதையும் இருவரும் நடிகர் சங்க கட்டிட நிதிக்கு கொடுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது...

ஏ.ஆர்.ரஹ்மானின் இயக்குனர் அனுபவம் குறித்த வீடியோ விருந்து

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் முதன்முதலில் Le Mask என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை அவர் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்...

அதிமுகவின் இரு அணி இணைப்பின் தாமதத்திற்கு காரணம் யார்? கருணாஸ்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கும் 122 எம்.எல்.ஏக்களில் ஒருவரான நடிகர் கருணாஸ், அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்றும் இந்த ஆட்சி நான்கு ஆண்டுகாலம் பூர்த்தி செய்தால்தான் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நிர்பயா தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவகல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்து ஒன்றில் ஆறு கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் மரணம் அடைந்தார்.