அட்லியின் அடுத்த படமும் பாதி ரெடி

  • IndiaGlitz, [Wednesday,March 23 2016]

விஜய் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் 'தெறி' படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் அட்லி, தன்னுடைய 'ஏ ஃபார் ஆப்பிள்' என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் திரைப்படம் 'சங்கிலி புங்கிலி கதவை தொற'

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி தொடங்கி இடைவேளை இன்றி பழநியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் பழநி படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அத்துடன் 50% படம் முடிவடைவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


பின்னர் சென்னை திரும்பும் படக்குழு மே மாதத்துடன் படப்பிடிப்பை முடித்துவிடும் என்றும் வரும் செப்டம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, தம்பி ராமையா, கோவை சரளா, ராதிகா, ராதாரவி, இளவரசு, தேவதர்ஷினி, மொட்டை ராஜேந்திரம் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தில் ஜெய் மற்றும் அக்ஷரா கவுடா ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கின்றனர்., விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

More News

'தெறி' சென்சாருக்கு செல்வது எப்போது?

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் பாடல்களும், டிரைலரும் விஜய் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து படக்குழுவினர் உற்சாகமாகி உள்ளனர்...

அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ள சந்தானம் படங்கள்

சந்தானம் ஹீரோவாக நடித்த 'இனிமே இப்படித்தான்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் அடுத்தடுத்து ஹீரோ வேடத்தில் நடித்து வருகிறார்...

ஏப்ரலில் சுந்தர் சியின் இரண்டு படங்கள் ரிலீஸ்

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 2' என்ற பேய்ப்படம் சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் ஏப்ரல் மாதம் அவர் தயாரித்த ஒரு படமும்...

'2.0' படப்பிடிப்பு முடிவது எப்போது?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக டெல்லி ஜவஹர்லால்...

விஜய்-சூர்யா-சிம்புவுடன் இணைந்தார் ஜி.வி.பிரகாஷ்

வரும் மே மாதம் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வருவதால் ஏப்ரல் மாதமே பெருவாரியான திரைப்படங்களை ரிலீஸ் செய்ய கோலிவுட் திரையுலகினர்...