close
Choose your channels

சந்தானம் - ஆர்.கண்ணன் படத்தின் முக்கிய தகவல்!

Monday, September 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2', 'ஏ1' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெறுகிறது. மசாலா பிக்ஸ் அசோசியேஷன் எம்.கே.ஆர்.பி புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும், இந்த படத்தை வரும் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்முக சுந்தரம் ஒளிப்பதிவில் ஆர்.கே.செல்வா படத்தொகுப்பில் ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சியில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கிய 'ஜெயம் கொண்டான்', 'வந்தான் வென்றான்', 'சேட்டை போன்ற படங்களில் சந்தானம் காமெடி நடிகராக நடித்திருந்த நிலையில் தற்போது அவரது இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.