சந்தானம் படத்திற்காக இணைந்த மூன்று இசையமைப்பாளர்கள்

  • IndiaGlitz, [Thursday,January 09 2020]

சந்தானம் நடித்த ’தில்லுக்கு துட்டு’ மற்றும் 'ஏ1' ஆகிய இரண்டு படங்களும் கடந்த ஆண்டு அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்துள்ள நிலையில், தற்போது அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று டகால்டி. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி ஹிட்டானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நாளை மாலை 5 மணிக்கு இந்த படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளது. விஜய் நரேன் கம்போஸ் செய்த இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர்களான சந்தோஷ் நாராயணன் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். மொத்தத்தில் இந்த பாடலுக்காக மூன்று இசையமைப்பாளர்கள் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக சந்தானம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் இந்த படத்தில் நடித்துள்ளார். அவற்றில் ஒன்று மும்பையில் வாழும் தமிழ்ப்பையன் வேடம். சந்தானம் ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகாசென் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படம் தீபக்குமார் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

More News

முத்தம் கொடுத்த ரசிகர்: கண்டுகொள்ளாத பிரபல நடிகை!

பிரபல நடிகை ஒருவருக்கு அவரது ரசிகர் ஒருவர் முத்தம் கொடுத்த நிலையில் அந்த ரசிகரை அவர் கண்டும் காணாமல் சென்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

"ரீ-ட்வீட் செய்தவர்களுக்கு 65 கோடி ரூபாய் பரிசு”, ஆச்சரியத்தில் ஆழ்த்திய கோடீஸ்வரர்..!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரான யுசகு மேஸவா, தனது ட்வீட்டை ரீ-ட்வீட் செய்தவர்களில் 1,000 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா ரூபாய் 6.50 லட்சம் பரிசாக அளிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

இறுதிச்சடங்கு செய்யும்போது திடீரென எழுந்து உட்கார்ந்த பெண்!

பாகிஸ்தான் நாட்டில் இறந்த பெண் ஒருவரின் பிணத்திற்கு இறுதி சடங்கு செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்தப் பிணம் எழுந்து உட்கார்ந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர் 

தலைமுடியை விற்ற பணத்தில் தற்கொலை முயற்சி: 3 குழந்தைகளின் தாய்க்கு குவிந்த உதவி

வறுமையின் கொடுமையில் சிக்கிய மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர் தனது தலைமுடியை விற்று மூன்று குழந்தைகளுக்கும் உணவு வாங்கிக் கொடுத்து மீதி உள்ள காசில் விஷம் குடித்து தற்கொலை

சிவகார்த்திகேயன் படத்திலும் பாலிவுட் வில்லன்!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாலிவுட் நடிகர்கள் வில்லன் வேடத்தில் நடித்து வருவது வழக்கமான ஒன்றாக கருதப்படுகிறது. அஜித் நடித்த விவேகம் படத்தில் விவேக் ஓபராய்,