ஆர்மீனியா நாட்டிற்கு செல்லும் செல்வராகவன்-சந்தானம் கூட்டணி

  • IndiaGlitz, [Wednesday,May 24 2017]

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் செல்வராகவனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

செல்வராகவன் இயக்கும் அடுத்த படம் சந்தானம் நடிக்கும் 'மன்னவன் வந்தானடி. செல்வராகவனின் 'யாரடி நீ மோகினி' படம் போலவே இந்த படமும் ஐடி ஊழியர்கள் குறித்த கதை என்றும், அதே நேரத்தில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் எமோஷனலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஆர்மீனியா நாட்டில் 20 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும், இதற்காக செல்வராகவன், சந்தானம், நாயகி ஆதித்தி போஹன்கர் உள்பட படக்குழுவினர் அனைவரும் விரைவில் ஆர்மீனியா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

யுவன்ஷங்கர் ராஜா இசையில், லோகநாதன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகவிருக்கும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை அடுத்து செல்வராகவன், சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினியை விமர்சித்தாரா சத்யராஜ்? சிபிராஜ் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து கடந்த வாரம் பேசியதில் இருந்து பல்வேறு தரப்பினர் அவரை விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்போம் என்று இதுவரை எந்த அரசியல் தலைவரும் கூறவில்லை. மாறாக அவர் அரசியலுக்கே வரக்கூடாது என்று விமர்சனம் செய்து வருகின்ற&

நீண்ட இடைவெளிக்கு பின் வெளியான கலைஞரின் புகைப்படம். திமுக தொண்டர்கள் உற்சாகம்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் முதன்முதலாக எம்.எல்.ஏஆக தேர்வு பெற்றார்...

பெண்களைப் பாலியல் ரீதியாக இழிவுபடுத்திப் பேசிய 73 வயது நடிகர்

இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் பெண்களின் வாழ்க்கை முறை முன்னேறி வருகிறது. ஆண்களுக்கு சமமாக பெண்களும் சமூகத்தில் உயர்ந்த பதவிகள் பெற்று சொந்தக்காலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோலிவுட் திரையுலகில் நடந்த இரண்டாவது அதிசயம்.

கடந்த சில வருடங்களாக உதயநிதி ஸ்டாலின், அருள்நிதி நடித்த படங்களுக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைப்பது என்பது எட்டாக்கனியாக இருந்தது. ஆனால் தற்போது அதே கட்சி ஆட்சி புரிந்தாலும் இந்த விஷயத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது...

லைகா நிறுவனத்துடன் மீண்டும் இணைந்த ஏ.ஆர்.முருகதாஸ்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயகக்த்தில் இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' படத்தின் மூலம்தான் லைகா நிறுவனம் கோலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்தது...