சிம்பு படத்தில் நடிக்க அழைப்பு வந்த போது தயாரிப்பாளரிடம் சாரி சொன்னேன்: சந்தானம்


Send us your feedback to audioarticles@vaarta.com


சிம்பு நடிக்க இருக்கும் 49வது படத்தில் சந்தானம் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார்.
சிம்புவின் ’எஸ்டிஆர் 49’ படத்தில் நடிக்க, அவரே எனக்கு போன் செய்து அழைப்பு விடுத்தார். நான் படம் ஒன்னு பண்ணுகிறேன், அதில் நீங்களும் நடிக்க வேண்டும் என்று கேட்டார். அவர் கேட்டவுடன் நான் ’எஸ்’ சொல்லிவிட்டேன். அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட இடத்தில் நான் அவரை வைத்திருக்கிறேன்.
சிம்பு எப்போது கேட்டாலும், நான் ’நோ’ சொல்ல மாட்டேன். என்னோட ஆரம்ப காலத்தில் அவருக்கு நான் ரொம்ப கடமைப் பட்டிருக்கிறேன். அவர் படத்தில் நடிக்க சிம்பு அழைப்பு விடுத்த போது, நான் இன்னொரு படத்தில் நடிப்பதற்கான வேலைகளை தொடங்கியிருந்தேன்.
ஆனால், சிம்புவுக்காக அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் ’சாரி’ கேட்டு, அவரிடம் அனுமதி பெற்று சிம்பு படத்துக்கு வந்து விட்டேன். எங்கள் அதிரடியை அந்த படத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, சிம்புவின் 49வது படத்தில் சந்தானம் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments