close
Choose your channels

இதுக்கும் அதுக்கும் என்னய்யா சம்பந்தம்? கருணாஸை கலாய்த்த சாந்தனு!

Wednesday, June 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாடக கலைஞர்களிடம் ஓட்டு கேட்க செல்லும்போது காசு கொடுப்பது குறித்து நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜ் கூறிய ஒரு கருத்து குறித்து பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் இதுகுறித்து ஆவேசமாக பேட்டியளித்த கருணாஸை கலாய்க்கும் வகையில் பாக்யராஜ் மகன் சாந்தனு ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். சாந்தனு தனது டுவிட்டரில் கூறியதாவது:

'இவரு சொன்னதுக்கும் நீங்க சொன்னதுக்கும் என்னங்கய்யா சம்மந்தம்? டுவிஸ்ட்டுன்னு பண்றிங்களே சார். நன்கு நாட்களுக்க்கு முன்பு கூட என்னிடம் நீங்கள் பேசியபோது என்னுடைய தந்தை குறித்து ரொம்ப பெருமையாக கூறினீர்களே! ஆனால் தேர்தல் என்று வந்தபின்னர் அவர் கூறியதை ஓட்டுக்காக திரித்து பேசுகின்றீர்களே.. எல்லாம் ஓட்டுக்காகவா? நமது உறவு தேர்தல், அரசியலையும் தாண்டியது சார்' என்று பதிவு செய்துள்ளார்.

உண்மையில் பாக்யராஜ் அந்த பேட்டியில், 'நாடகக்கலைஞர்கள் எப்போதும் வறுமையில் இருப்பதால் ஓட்டு கேட்க போகும்போது காசு கேட்பது வழக்கம்தான் என்றும் அது ஓட்டுக்காக அல்ல, என்றும் ஒரு உதவியாகத்தான் நாங்களும் தருவோம், எங்கள் எதிரணியும் தருவார்கள்' என்றும் பேசினார். பாக்யராஜ் பேசிய யதார்த்தமான கருத்தைத்தான் தற்போது பாண்டவர் அணியினர் அரசியல் செய்து வருவதாக கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.