'தல' ரசிகர் இப்படி செய்யலாமா? நடிகர் சாந்தனு ஆதங்கம்

  • IndiaGlitz, [Thursday,August 08 2019]

'தல' அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் இன்று வெளியான நிலையில் இன்றைய முதல் நாள் முதல் காட்சியை பார்க்க பெரும்பாலான கோலிவுட் பிரபலங்கள் தியேட்டரை நோக்கி படையெடுத்து வந்தனர். இந்த நிலையில் 'நேர் கொண்ட பார்வை படத்தை பார்க்க சென்னை திரையரங்கம் ஒன்றுக்கு நடிகர் சாந்தனு தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்

சென்னை திரையரங்கில் தான் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தை பார்க்க வந்ததாகவும், அப்போது தனக்கு அருகில் இருந்த அஜித் ரசிகர் ஒருவர் பெட்ரோலை அவர் மீதே ஊற்றிக் கொண்டு தீ பற்றவைக்க தீப்பெட்டியை தேடியதாகவும், 'நேர்கொண்ட பார்வை' படத்தின் டிக்கெட் பிரச்சனையால் அவர் இந்த முடிவை எடுத்ததாகவும், இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் பதிவு செய்துள்ளார்

தல அஜித் உள்பட எந்த ஒரு நடிகராக இருந்தாலும் இதனை கண்டிப்பாக விரும்ப மாட்டார்கள் என்றும், ஒரு சினிமா டிக்கெட்டுக்காக வாழ்க்கையையே தொலைத்து கொள்வதா? என்றும் ஆதங்கத்துடன் இந்த கருத்தை நடிகர் சாந்தனு பதிவு செய்துள்ளார். நடிகர் சாந்தனுவின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும் கேலி செய்தும் கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன