close
Choose your channels

கமல் கட்சியில் இருந்து விலகும் பிரபலங்கள்: என்ன ஆகும் கட்சியின் எதிர்காலம்?

Thursday, May 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் சமீபத்தில் விலகிய நிலையில் தற்போது மேலும் இரண்டு பிரபலங்கள் விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பதும், கமல்ஹாசனே கோவை தெற்கு தொகுதியில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் சமீபத்தில் விலகியதை அடுத்து மேலும் சில பிரபலங்கள் விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். தனது சொந்த காரணங்களுக்காக விலகுவதாகவும் இருப்பினும் கமல்ஹாசனுடன் தனது நெருங்கிய நட்பு தொடரும் என்றும் அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

இதேபோல் சந்தோஷ் பாபுவை அடுத்து பத்மபிரியாவும் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன் என்றும் அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என கருதி தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் எனது களப்பணி எப்போதும்போல் சிறப்பாக தொடரும் என்றும் பத்மபிரியா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

கமல் கட்சியில் இருந்து முக்கிய பிரபலங்கள் விலகிக் கொண்டு இருப்பதை அடுத்து அக்கட்சியின் எதிர்காலம் என்ன ஆகும் என்று கவலையுடன் தொண்டர்கள் இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.