நடிகர் பசுபதியா இவர்? ஆச்சரியப்பட வைக்கும் இளவயது புகைப்படம்!

  • IndiaGlitz, [Tuesday,July 27 2021]

சமீபத்தில் வெளியான பா ரஞ்சித்தின் ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படத்திற்கு திரையுலகினர், ரசிகர்கள், அரசியல் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் கபிலன் என்ற கேரக்டராகவே ஆர்யா வாழ்ந்துள்ளார் என்றும் அவரது நடிப்பு இந்த படத்தில் மெருகேறி உள்ளது என்றும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆர்யாவை அடுத்து இந்த படத்தில் குறிப்பிடத்தக்க வகையில் நடித்தவர் என்றால் அது ரங்கன் வாத்தியார் என்ற கேரக்டரில் நடித்த பசுபதிதான். பசுபதிக்கு மிகவும் பொருத்தமான கேரக்டர் என்பதால் இந்த கேரக்டருக்கு அவரை விட்டால் யாராலும் இந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாயன் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் ’தூள், ’இயற்கை’, ‘அருள்’, ‘விருமாண்டி’, ‘திருப்பாச்சி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்த்தது சார்பாட்டா பரம்பரை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பசுபதியின் இளவயது புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பசுபதி கர்லிங் முடியுடன் உள்ளதை பார்க்கும் போது அனைவருக்கும் ஆச்சரியமாக உள்ளது. இப்படிப்பட்ட முடியுடன் இருந்த பசுபதி இப்பொழுது முடி இல்லாமல் இருக்கிறாரே என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

More News

சினிமா பாணியில் ஆக்ஸன் காட்சி....! தலைமை காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்.....!

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் முயற்சியில் போலீசார் தீவிர பரிசோதனை நடத்தி வருகிறார்கள்...

பாரதி கண்ணம்மா தொடர்....! நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா...?

தனியார் சேனலில் வெளியாகி, தற்போது வரவேற்பு பெற்றுள்ள சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான்.

தோழி பவானி இறந்தது இன்னும் யாஷிகாவுக்கு தெரியாதா? 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை யாஷிகா தனது தோழி பவானி மற்றும் 2 ஆண் நண்பர்களுடன் சென்னைக்கு காரில் வந்து கொண்டிருக்கும் போது அவர் வந்த கார் திடீரென விபத்துக்குள்ளானது

விஜய் அபாரதத்திற்கு தடை: நீதிபதிகள் அதிரடி உத்தரவு!

கார் வரி வழக்கில் நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் விஜய் குறித்து தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் ஆகியவற்றுக்கு இடைக்கால தடை விதித்து இரண்டு நீதிபதிகள் கொண்ட

பிரசவத்தில் குழந்தைக்கு பரவும் கொரோனா? இந்தியாவில் தலைத்தூக்கும் புது சிக்கல்!

இந்தியாவில் பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு,