close
Choose your channels

சரத்குமார், ராதிகாவின் அடுத்தடுத்த அரசியல் அதிரடி அறிவிப்புகள்!

Thursday, January 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா இருவரும் அடுத்தடுத்து அரசியல் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் சரத்குமார் கடந்த 1994ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதன் பின்னர் அக்கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் 1998 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்

இதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு அவர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கி தற்போது 13 ஆண்டுகளாக கட்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அதிமுக கூட்டணியில் பெரும்பாலும் இணைந்து போட்டியிட்டு தேர்தலை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஒரு சீட்டு அல்லது இரண்டு சீட்டுகளுக்கு அரசியலில் இருக்க போவதில்லை என்றும் வரும் தேர்தலில் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். இவர் இதுவரை அதிமுக கூட்டணியில் இருந்த போது இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா இன்று அளித்த பேட்டியின்போது ’சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலகப் போவதாகவும் கணவருடன் இணைந்து முழுநேர அரசியலில் ஈடுபட போவதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் சூறாவளி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று சரத்குமாரும், முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக ராதிகாவும் அடுத்தடுத்து அதிரடி அரசியல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.