close
Choose your channels

சரத்குமார் நடிக்கும் முதல் வெப்சீரிஸ்: தயாரிப்பாளர், இயக்குனர் யார் தெரியுமா?

Tuesday, July 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரை உலகில் பல்வேறு சாதனைகள் செய்த நடிகர் சரத்குமார் முதல் முதலாக ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஒரு வெப்தொடரில் நடிக்க உள்ளார். இந்த தொடர் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

ராதிகாவின் ராடான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த வெப்தொடருக்கு ’இறை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும், மேலும் இந்த தொடரில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரை இயக்க இருப்பவர் ராஜேஷ் எம் செல்வா என்பது குறிப்பிடதக்கது. இவர் ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த ’தூங்காவனம்’ மற்றும் கமல் தயாரிப்பில் விக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஒரு ஆங்கில நாவலின் தழுவல் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ பூஜை சமீபத்தில் நடைபெற்று ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.