close
Choose your channels

ஐஸ்வர்யாராய் - சரத்குமார் சந்திப்பு: வைரல் புகைப்படங்கள்

Sunday, July 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் குடும்பத்தினர்களை நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் சந்தித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் தற்போது ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐஸ்வர்யா ராய் தற்போது புதுச்சேரிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் சரத்குமார், படப்பிடிப்பின் இடையே ஐஸ்வர்யா ராய் குடும்பத்தினரை சந்தித்தார். ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோர்களை சரத்குமார் மற்றும் அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் சந்தித்தனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யாராய், ‘மந்தாகினி’ மற்றும் ‘நந்தினி’ ஆகிய இரண்டு கேரக்டர்களில் நடித்து வருகிறார் என்பதும், பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் சரத்குமார் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.