close
Choose your channels

சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

Thursday, July 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கிளைகொண்ட ஓட்டல் நிறுவனம் சரவணபவன். இந்த நிறுவனத்தின் அதிபர் ராஜகோபால் அவர்கள் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றார். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் ராஜகோபால் மகனின் வேண்டுகோளை ஏற்று ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன் அவர் காலமானதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.