இத நான் யார்கிட்டயும் சொல்லல: இரண்டாவது மனைவி குறித்து மனம் திறந்த பிக்பாஸ் சரவணன்!

  • IndiaGlitz, [Friday,November 27 2020]

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவர் சரவணன் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் 46வது நாளில் திடீரென வெளியேற்றப்பட்டு விட்டார் என்பதும் தெரிந்ததே. சரவணன் எதற்காக வெளியேற்றப்பட்டார் என அப்போதைய சக போட்டியாளர்கள் மட்டுமன்றி பார்வையாளர்களுக்கும் பெரும் குழப்பம் இருந்தது

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியதால்தான் வெளியேற்றப்பட்டார் என்று கூறப்பட்டாலும், உண்மையான காரணம் அதுவாக இருக்காது என்றே அனைவரும் கருத்து கூறி வந்தனர். இந்த நிலையில் நமக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த சரவணன் இது குறித்து கூறிய போது ’நான் ஏன் வெளியேற்றப்பட்டேன் என்று எனக்கு இப்போது வரை தெரியவில்லை. அதனால் இது குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறினார் 

மேலும் தான் ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்பது குறித்த தகவலை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். இதுவரை இது குறித்து தான் யாரிடமும் கூறவில்லை என்றும் இப்பொழுதுதான் முதன் முதலாக பேசுகிறேன் என்று கூறினார் 

ஒருநாள் நான் என் இரண்டாவது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். அவர் கர்ப்பமாக இருந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் ’உங்கள் மகள் கர்ப்பமாக இருக்கிறாரா? என்று கேட்டார். அவரது கேள்வி எனது மனைவிக்கும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு என் மனைவி என்னுடன் வெளியே வரவே இல்லை. 

அப்போது தான் ’நான் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நான் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டேன் என்பதை எல்லோரிடமும் தெரிவிப்பேன். அதன் பிறகு உன்னை நான் வெளியே அழைத்துச் செல்கிறேன் என்று கூறினேன். அந்த ஒரு சந்தர்ப்பமாகத்தான் நான் பிக்பாஸை பயன்படுத்திக்கொண்டேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டதையும் எனக்கும்  இரண்டாவது மனைவிக்கும் ஒரு குழந்தை இருப்பதையும் நான் பகிரங்கமாக தெரிவித்தேன். இப்போது நான் அவரை தைரியமாக வெளியே அழைத்துச் செல்கிறேன்’ என்று கூறினார். மேலும் இனிமேல் கோடி ரூபாய் கொடுத்தாலும் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன்’ என்று கூறினார்

More News

புதிய புயலால் வரப்போகும் பாதிப்பு… இந்திய வானிலையின் எச்சரிக்கை!!!

நிவர் புயல் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது. இந்தப் புயல் கரையைக் கடப்பதற்கும் முன்பும் பின்பும் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அதேபோல வரும் நவம்பர் 29

அர்ச்சனா மடியில் ரியோ, தலைவாரி விடும் நிஷா: குரூப்பெல்லாம் இல்ல!

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா தலைமையில் எந்தவித குரூப்பும் இல்லை என்ற என நம்ப வைக்க அந்த குரூப்பில் உள்ளவர்கள் போராடி வரும் நிலையில் இன்றைய

பாலாஜி பாணியிலேயே பாலாஜியை வெறுப்பேற்றிய ஷிவானி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியின் கேரக்டர் ஒட்டுமொத்த முரண்பாடாக உள்ளதை பலமுறை பார்த்துவிட்டோம். திடீரென ஆத்திரத்தில் பொங்கி எழுவார், திடீரென நக்கலாக எதிராளியை குத்தி காட்டுவார்,

இந்த வாரம் பாலாஜிக்கு குறும்படம் உண்டா? கமலிடம் எதிர்பார்க்கும் பார்வையாளர்கள்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் வாக்குவாதங்கள் அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஒரு வாக்குவாதத்தில் பாலாவை போட்டியாளர்கள்

சென்னை கடலில் தெரிந்த மூவர்ணம்: பிரபல நடிகரின் வீடியோ!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் சென்னை கடலில் தெரிந்த மூவர்ணம் குறித்த வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது