close
Choose your channels

பிக்பாஸ் பைனலுக்கு ஏன் போகவில்லை: சரவணன் விளக்கம்

Wednesday, October 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சரவணன், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதால் திடீரென பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போதும் அவர் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல், பேட்டியும் அளிக்காமல் இருந்தார். மேலும் தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது அளித்த போது கூட அவர் பிக்பாஸ் குறித்து செய்தியாளர்களிடம்எந்த கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பைனல் நிகழ்ச்சியில் சரவணன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களாக வெளியேற்றப்பட்ட சரவணன் மற்றும் மதுமிதா ஆகிய இருவருமே பைனலில் கலந்து கொள்ளவில்லை

இந்த நிலையில் இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சரவணன், 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறித்து பேச வேண்டாம் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், பைனல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது தனக்கு ஒரு விஷயமே இல்லை என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தாண்டி தன்னுடைய வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

மேலும் தற்போது பாரதிராஜாவின் உதவியாளர் இயக்கத்தில் 'மருத' என்ற படத்தில் நடித்து வருவதாகவும் இந்த படத்தில் தான் அண்ணனாகவும் ராதிகா தங்கையாகவும் நடிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஒரு சில படங்களின் தான் நடித்து வருவதாகவும், மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.