ராகுல்காந்தியை எதிர்த்து சரிதா நாயர்: பரபரப்பாகும் வயநாடு தொகுதி

அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று அவர் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் சோலார் பேனல் மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கேரளாவின் பெண் தொழிலதிபர் சரிதா நாயர், ராகுல்காந்தியை எதிர்த்து, வயநாடு தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மற்றும் எம்.எல்.ஏ ஹிபி ஈடன் ஆகியோர் தன்னை பாலியல் தொல்லை செய்ததாகவும், அவர்கள் குறித்து ராகுல்காந்தியிடம் தான் புகார் அளித்ததாகவும், தனது புகார் மீது அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தான் யார் என்பதை அவருக்கு புரிய வைக்கவே வயநாடு தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிடுவதாகவும் சரிதா நாயர் கூறியுள்ளார்.

மேலும் எம்.எல்.ஏ ஹிபி ஈடன் போட்டியிடும் எர்ணாகுளம் தொகுதியிலும் தான் போட்டியிட போவதாக சரிதா நாயர் அறிவித்துள்ளார். சரிதா நாயர் போட்டியிடுவதால் வயநாடு தொகுதி பரபரப்பாகியுள்ளது