மிஷ்கின் படத்தில் இணைந்த 'சார்பட்டா பரம்பரை' நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,August 05 2021]

பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்த ’சார்பட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் நடித்த ஆர்யா மட்டுமின்றி பசுபதி, துஷாரா, சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்ளிட்ட பலரும் தங்கள் கேரக்டராகவே வாழ்ந்தார்கள் என்பதால் அனைவரும் நடிப்புக்காக பாராட்டப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி இந்த படம் ஆர்யா உள்பட பலருக்கும் திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தோல்வி படங்கள் கொடுத்து வந்த ஆர்யாவுக்கு தற்போது படவாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் அவரை அடுத்து ’சார்பட்டா பரம்பரை படத்தில் ராமன் என்ற முக்கிய கேரக்டரில் நடித்த சந்தோஷ் பிரதாப்புக்கும் தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது

பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அதன்பின் ஹீரோவாகவும் சின்னச்சின்ன கேரக்டரிலும் நடித்து வந்த சந்தோஷ் பிரதாப், ஒரே ஒரு திருப்புமுனை படத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக காத்திருந்தார். அந்த திருப்புமுனை படமாக ’சார்பட்டா பரம்பரை’ படம் அவருக்கு கிடைத்துள்ளது.

அந்த வகையில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் ’பிசாசு 2’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க சந்தோஷ் பிரதாப் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மிஷ்கின் படத்தில் நடித்தால் நடிப்புத்திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு இருக்கும் என்பதால் சந்தோஷ் பிரதாப் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இடதுகால் தசைநார் சேதம்: 21 ஆண்டுகளாக சிகிச்சை செய்யாமல் இருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்!

இடது காலில் தசைநார் சேதமடைந்த நிலையில் அந்த அதற்கு 21 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் சிகிச்சை செய்யாமல் இருக்கும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் காலமானார்!

அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்… மல்யுத்தப் பிரிவில் சாதனை படைத்த வீரர்!

ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர் ரவி குமார் தாஹியா அரையிறுதியில்

கொரோனா பூஸ்டர் டோஸ் போடுவதை நிறுத்துங்கள்… கோரிக்கை வைக்கும் WHO… ஏன்?

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பூஸ்டர் டோஸ் போடுவதை உலக நாடுகள் குறைந்தது

பாலியல் புகாரளித்த பெண்....! அநியாயத்திற்கு ஆதாரம் கேட்ட பல்கலைக்கழகம்......!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர் பாலியல் புகாரளித்தற்கு, ஆதாரம் கேட்டுள்ளது அந்த நிர்வாகம்.