close
Choose your channels

இந்த பொண்ணு வேணாம்னு சொன்னாங்க: 'மாரியம்மா' கேரக்டர் குறித்து நடிகை துஷாரா!

Wednesday, July 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’சார்பாட்ட பரம்பரை’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் ஆர்யாவின் நடிப்பு மட்டுமின்றி ஒவ்வொரு கேரக்டரும் மனதில் பதியும் வகையில் திரைக்கதை அமைத்ததோடு, அந்த கேரக்டர்களில் நடித்தவர்கள் கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்ததும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’சார்பாட்ட பரம்பரை திரைப்படத்தில் மாரியம்மாள் என்ற கேரக்டரில் நடித்த நடிகை துஷாரா தனது கேரக்டர் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தன்னை இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் என்று சிலர் முயற்சி செய்ததாகவும் ஆனால் பா ரஞ்சித் தன் மீது நம்பிக்கை வைத்து இந்த பெரிய பொறுப்பை தன்னிடம் கொடுத்ததாகவும், அந்த பொறுப்பை தான் காப்பாற்றி உள்ளதாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது இன்ஸ்டாவில் கூறியிருப்பதாவது

எல்லா கனவுகளும் நிஜம் ஆகுமான்னு என்ன கேட்டா எனக்கு தெரியாது, ஆனா ஜூலை 22, என் வாழ்னாளில் மறக்க முடியாத ஒரு அனுபவம் ஆகிருச்சு. சார்ப்பட்டாவின் வெற்றி இது. என்னால வார்த்தைகலால சொல்ல முடியாத வெற்றி! குடுத்த வேலைய ஒழுங்கா பன்னிருக்கேன்னு ரொம்ப மனசுக்கு நிம்மதியாவும் சந்தோஷமாவும் இருக்கு.

மாரியம்மா என் வாழ்க்கைல ரொம்ப சந்தோஷத்த தந்திருக்கா, எல்லாரும் அவள கொண்டாடுரத அவ்வளவு அழகா என்ன ஃபீல் பன்ன வச்சுட்டா. எல்லாரும் இந்த பொண்ணு வேணாம்னு சொன்னப்ப இவதான் மாரியம்மானு ஆணி தனமா நம்புன ரஞ்சித் ஐய்யாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது.

எல்லாருக்கும் ஒரு சின்ன நம்பிக்கை போதும், எத வேணும்னாலும் பன்னிரலாம். அப்படி ஐய்யா நம்பி, நான் உயிர் குடுத்தவ மாரியம்மா. நான் ரொம்ப விரும்பி மாரியம்மாவாக நடிச்சேன். முதல் பெரிய படம், நீங்க ஒவ்வொருத்தரும் வாழ்த்துகள் சொல்லும்போது ரொம்ப மெய் சிலிர்க்குது, ரொம்ப பயமும் வருது. பெரிய நன்றி எல்லாருக்கும் மாரியம்மாவ சரியான வகைல புரிஞ்சுகிட்டதுக்கு.

படத்துல என் கூட நடிச்ச எல்லாருக்கும் நன்றி மட்டும் சொன்னா பத்தாது. கபிலன் எனக்கு ஒரு பெரிய உருதுணையா இருந்தாரு. படத்துல நடிச்ச எல்லாருமே அவங்க நடிப்பு கொண்டாடப்படனும்னு தான் நடிச்சு இருக்கோம். துணை எழுத்தாளர் தமிழ் பிரபா அண்ணனுக்கு ரொம்ப நன்றி சொல்லனும், அவ்வளவு சரளமாக நான் வடசென்னை பேச்சு வழக்கு பேசுரதுக்கு அவர் ஒரு முக்கிய காரணம்.

இவ்வாறு நடிகை துஷாரா தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.