close
Choose your channels

இதுவே கடைசி அல்ல… கொரோனா குறித்து மேலும் அதிர்ச்சியூட்டும் கருத்துகளை வெளியிட்ட விஞ்ஞானி!!!

Monday, October 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இதுவே கடைசி அல்ல… கொரோனா குறித்து மேலும் அதிர்ச்சியூட்டும் கருத்துகளை வெளியிட்ட விஞ்ஞானி!!!

 

கொரோனா வைரஸின் தாக்கம் உலகத்தைப் புரட்டிப் போட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த வைரஸின் உருவாக்கத்தைப் பற்றி சர்ச்சை கருத்துகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் அமெரிக்க அதிபர். ஆனால் கொரோனா வைரஸை மனிதர்கள் உருவாக்கி இருக்க வாய்ப்பே இல்லை என உறுதியாகக் கருத்து வெளியிட்டு இருக்கிறார் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் நுண்ணுயிரியல் பேராசிரியர் சூசன் வைஸ்.

அதில் கோவிட்-19 நோயை விளைவிக்கும் சார்ஸ்-கோவ்-2 (SARS-coV-2) என்ற கொரோனா வைரஸ் இயற்கையாகவே உருவானதே அன்றி மனிதர்களால் ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப் பட்டதல்ல” என்று தெரிவித்து இருக்கிறார். மேலும் கொரோனா வைரஸ் குறித்த சில நுணுக்கமான ஆய்வுக் கருத்துகளையும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

சென்னையில் உள்ள தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் ஒன்று நடத்திய கருத்தரங்களில் கலந்து கொண்டு பேசிய அவர், மேலும் கோவிட்-19 நோயை விளைவிக்கும் சார்ஸ் கோவ்-2 என்ற கொரோனா வைரஸானது பல்வேறு வழிகளில் செல்களில் புகுந்து பெருகுகிறது. அதே நேரம் இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து, இந்த வைரஸ் இயற்கையாகத் தோன்றியது என்றுதான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் மனிதன் உடலில் உள்ள ஓம்புயிரி செல்களை இவ்வளவு துல்லியமாகச் சென்றடையக் கூடிய வகையில் குறிப்பிட்ட மாற்றங்களை அடையக் கூடிய நுண்கிருமியை மனிதர்களால் வடிவமைக்க முடியாது. எனவே இந்த வைரஸ் ஆய்வகங்களில் உற்பத்தி செய்யப்பட்டிருக்க முடியாது என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், மனிதர்களிடையே பரவி நோய்களை விளைவிக்கும் வைரஸ்களில் சார்ஸ் கோவ்-2 கடைசியாக இருக்க போவதில்லை என்றும் அவர் எச்சரித்தார். உலகில் இதுவரை சார்ஸ் கொரோனா வைரஸ் தாக்குதல் 2 முறையும் மெர்ஸ் வைரஸ் தாக்குதல் ஒரு முறையும் நிகழ்ந்துள்ளன. மனித குலத்தின் மீதான அடுத்த வைரஸ் தாக்குதல் சார்ஸ் கொரோனா வைரஸைவிட குறைவான வேகத்தில் பரவக்கூடிய அதிக உயிர்கொல்லித் தன்மை வாய்ந்த மெர்ஸ்-2 (Mers-2) ஆகவும் இருக்கலாம் என அதிர்ச்சி ஏற்படுத்தும் கருத்தை கூறியுள்ளார். இந்தக் கருத்து விஞ்ஞானிகளிடையே மேலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos