ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். ஓபிஎஸ்-சசிகலா அணியின் சின்னங்கள்

  • IndiaGlitz, [Thursday,March 23 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரு அணிகளுக்கும் ஒன்றுபட்ட அதிமுகவின் சின்னமான இரட்டை இலை கிடையாது என்றும் அந்த சின்னம் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில் இன்று காலை பத்து மணிக்கு இரு அணியினர்களும் தலா மூன்று சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரை செய்யவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்படி சசிகலா அணியினர்களும், ஓபிஎஸ் அணியினர்களும் தேர்தல் சின்னங்களை சமர்ப்பித்தனர். அதிலிருந்து சசிகலா அணிக்கு தொப்பி சின்னமும், ஓபிஎஸ் அணிக்கு இரட்டை மின்கம்பம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
மேலும் இரு அணிகளும் அதிமுக கட்சி பெயரை பயன்படுத்த கூடாது என்று கூறிவிட்ட நிலையில் சசிகலா தரப்பு கட்சியின் பெயர் அதிமுக அம்மா என்றும், ஓ.பி.எஸ் தரப்பு கட்சியின் பெயர் 'அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி' என்றும் அழைக்க தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.

More News

கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி

பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்.கே.நகரில் ஆதரவு யாருக்கு? ரஜினிகாந்த் அறிவிப்பு

கடந்த 1996ஆம் ஆண்டு தேர்தல் ரஜினியின் வாய்ஸ் காரணமாகவே ஆட்சி மாற்றம் நடந்ததாக கூறப்படுவதுண்டு.

'இரட்டை இலை' முடக்கம். சுயேட்சை வேட்பாளர்களாக மாறிய டிடிவி தினகரன் - மதுசூதனன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை கட்டுக்கோப்பாக இருந்த அதிமுக, அவர் மறைந்த ஒருசில நாட்களில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக உடைந்தது. ஆர்.கே.நகர் தொகுதியில் இரு அணிகளும் போட்டியிடுவதால் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தன...

இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர் விழாவில் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், தனது அறக்கட்டளையின் சார்பில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு கொடுப்பதற்காக 150 புதிய வீடுகளை கட்டியுள்ளது...

'நான் பிழைப்பேனா? தனுஷ் கேட்பது யாரிடம்?

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது. இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...