நான் அம்மாவின் உண்மையான விசுவாசி. என்னை யாரும் நீக்க முடியாது. ஓபிஎஸ்

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில், பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறாது.

இதுகுறித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓபிஎஸ் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியபோது, "நான் அதிமுக கட்சியின் அடிமட்டத் தொண்டன். அம்மாவின் உண்மையான விசுவாசி. என்னை நீக்குவதற்கு யாருக்கும் உரிமையில்லை.

எனது மடியில் கனம் இல்லை. எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினைப் பார்த்து சிரிப்பது குற்றமாகாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்னை அதிமுகவின் பொருளாளராக நியமித்தார். அவரது மன நிறைவுக்கு ஏற்ப பணியாற்றி உள்ளேன். அந்தப் பதவியில் என்னை நீக்க யாருக்கும் உரிமையில்லை. நான் அம்மாவின் தீவிரமான தொண்டன். என்ன நடக்கப் போகிறது என்பதை சற்று பொறுத்திருந்து பாருங்கள்' என்று கூறியுள்ளார்.

தன்னை பொருளாளர் பதவியில் இருந்து நீக்கிய சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் இன்று என்ன அதிரடி நடவடிக்கை எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம். சசிகலா நடவடிக்கை

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று இரவு தனது உள்ளக்குமுறல்களை ஜெயலலிதா நினைவிடத்தில் எழுப்பியது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கட்சியின் தலைமையால் மிரட்டப்பட்டு நிர்ப்பந்தத்தின் காரணமாகவே பதவியை ராஜினாமா செய்தேன் என்று அவர் கூறியது தமிழக மக்களை மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது...

ஓபிஎஸ் அதிரடியை தொடர்ந்து அமைச்சர்களுடன் சசிகலா அவசர ஆலோசனை

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சற்று முன்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தான் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மக்களும் தொண்டர்களும் விரும்பும் ஒருவர்தான் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் வரவேண்டும் என்பதற்காக தன்னந்தனியாக போராடுவேன் என்று அதிரடியாக பேட்டி அளித்தார்...

ஓபிஎஸ் பேட்டியை தொடர்ந்து ஆளுனர் அலுவலகத்தின் முக்கிய தகவல்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் அதிரடி பேட்டியை அடுத்து ஒருபக்கம் சசிகலா மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் தமிழக பொறுப்பு கவர்னராக இருக்கும் வித்யாசாகர் ராவ் அவர்களின் அலுவலகத்தில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வந்துள்ளது...

ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன். இறுதிவரை தனியாக போராடுவேன். ஜெ.நினைவிடத்தில் ஓபிஎஸ் அதிரடி

தமிழக முதல்வர் ஓபிஎஸ் நேற்று முன் தினம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சசிகலாவை முதல்வராக முன்மொழிந்தார். அதன்பின்னர் சசிகலா முதல்வர் பதவியை ஏற்க தயாராகியுள்ள நிலையில் இன்று சற்று முன்னர் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் சுமார் 40 நிமிடங்களுக்கும் மேல் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்துவிட்டு பின்னர் செய்&

சசிகலா வீட்டு முன் சங்கு ஊதிய 5 பேர் கைது

தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துக்களில் இருந்து அறிய முடிகிறது. இருப்பினும் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளின் பரிபூரண சம்மதத்துடன் அவர் வரும் 9ஆம் தேதி முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்