close
Choose your channels

சசிகலாவுக்கு 5 நாள் பரோல். இன்று மாலை சென்னை வருகிறார்

Friday, October 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் கிடைத்துள்ளதாகவும் இதனையடுத்து இன்று மாலை பெங்களூரில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் சசிகலா வருகிறார் என்றும் தினகரன் அணி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை சந்திக்க தன்னை 15 நாட்கள் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் பரோல் விண்ணப்ப மனு சிறைத்துறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது. இந்த மனுமீதான சட்டநடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில் சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் கிடைத்துள்ளது

எனவே இன்று மாலை சசிகலா சென்னை வரும் சசிகலா சென்னை தியாகராயநகரில் இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டில் சசிகலா தங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்று மாலையே அவர் கணவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு செல்வார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும், ஊடகங்களை சந்திக்கக்கூடாது என்றும் சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.