சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகையா?

  • IndiaGlitz, [Tuesday,February 21 2017]

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ஹாகர சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என சிறை அதிகாரிகளிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
சசிகலா மற்றும் இளவரசி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இருவருக்கும் சேர்த்து தனி அறை வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக கட்டில் மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் சிறையில் மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் சசிகலா சிறையில் இருந்தபோது முதல் வகுப்பு வசதி, வீட்டுச் சாப்பாடு, மின்விசிறி, அன்றாடம் செய்தித்தாள் ஆகியவை வழங்கப்பட்டன. ஆனால் தற்போது இந்த வசதிகள் சசிகலாவுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சசிகலா உள்பட மூன்று பேர்களுக்கும் தலா ரூ.10 கோடி அபராதத்தொகையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தொகையை கட்டாத பட்சத்தில் அவர்கள் மேலும் சில நாட்கள் அல்லது மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் சிறை வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

நம்பிக்கை வாகெடுப்பு குறித்த ஸ்டாலின் வழக்கு. நாளை விசாரணை

கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது. இந்த வாக்கெடுப்பில் அமளி ஏற்பட்டதால் திமுக உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பின்னர் வாக்கெடுப்பு நடந்தது....

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தென்னிந்திய திரையுலகையே சமீபத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் என்றால் அது பிரபல நடிகை பாவனாவை மர்ம நபர்கள் கடத்தி அத்துமீறிய சம்பவம்தான். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்க கோரியும் மலையாள திரையுலகம் மட்டுமின்றி தமிழ் திரையுலகமும் கேரள அரசுக்கு கோரிக்கை விட

பாவனா கடத்தலுக்கு பிரபல நடிகர் காரணமா?

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தின் விசாரணை தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஏற்கனவே இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் என்று கூறப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது...

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால். சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

நடிகர் சங்க செயலாளராக இருக்கும் நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட கடந்த சில நாட்களுக்கு முன்னர் விண்ணப்பம் செய்தார். இந்த விண்ணப்பத்தை உலக நாயகன் கமல்ஹாசன் முன்மொழிந்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

தேசிய அளவிலான பளூதூக்கும் போட்டியில் தமிழ் நடிகை

விளையாட்டு துறையில் சாதனை படைத்த சடகோபன் ரமேஷ், ரித்திகாசிங் போன்ற பலர் சினிமா துறையில் நுழைந்தது போல், சினிமாத்துறையில் உள்ள ஒரு நடிகை விளையாட்டு துறைக்கு சென்றுள்ளார்...