சசிகலாவின் நெருங்கிய உறவினர் திடீர் மரணம்

  • IndiaGlitz, [Saturday,April 15 2017]

சசிகலாவின் சகோதரர் வினோதகனின் மூத்த மகன் மகாதேவன் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47.

சசிகலாவின் அண்ணன் வினோதகன் மகன் மகாதேவன் இன்று காலை திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்ற போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது போயஸ் தோட்டத்தில் சர்வ அதிகாரத்துடன் வலம் வந்தவர்களில் மகாதேவனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருந்த மகாதேவன் பின்னர் திடீரென ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டு போயஸ் கார்டனில் இருந்தும் கட்சியிலிருந்தும் விரட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகாதேவன் மரணம் அடைந்ததை அடுத்து அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சசிகலா ஜெயிலில் இருந்து பரோலில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஒவ்வொரு அடிக்கும் 100 ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும். கவுதம் காம்பீர் ஆவேசம்

சமீபத்தில் நடந்த ஸ்ரீநகர் தேர்தலின்போது வாக்கு இயந்திரத்தை கொண்டு சென்ற சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது சில ஜிகாதிகள் தாக்குதல் நடத்தி அவமதித்த வீடியோ ஒன்று நாடு முழுவதும் பரவி பெரும் கண்டன அலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறிய கருத்து குறித்து நேற்று பார்த்தோம்...

விஜய், சூர்யாவை அடுத்து அஜித்துடன் நடிப்பது எப்போது? கீர்த்தி சுரேஷ்

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய கீர்த்திசுரேஷ் குறுகிய காலத்தில் இளையதளபதி விஜய்யுடன் 'பைரவா' மற்றும் சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்...

சமண முனிவருக்கு ஈடானவர் பாரதிராஜா: கமல்ஹாசன்

பிரபல இயக்குனர் பாலுமகேந்திராவின் 'கூத்துப்பட்டறை'க்கு பின்னர் பாரதிராஜா தற்போது சினிமாவுக்கு என ஒரு தனி பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளார். 'பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சினிமா' என்ற இந்த சினிமா பயிற்சி மையத்தின் தொடக்கவிழா நேற்று சிறப்பாக நடந்தது...

வடபழனி கோவிலில் பிச்சை எடுத்த ஜமுனாவுக்கு விஷால் உதவி

சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சிவகுமார் ஆகியோர்களுடன் நடித்த குரூப் டான்சர் ஜமுனா என்பவர் சென்னை வடபழனி கோவிலில் பிச்சை எடுப்பதாகவும், அவர் தனக்கு, தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க செயலாளர் விஷால் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த செய்தியையும் சமீபத்தில் பார்த்தோம்...

தொலைக்காட்சிக்கு மாறுகிறாரா கமல்ஹாசன்?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'சபாஷ் நாயுடு' என்ற படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தார்...