வழக்கிலிருந்து தப்பித்தார் சசிகலா

  • IndiaGlitz, [Wednesday,March 01 2017]

அதிமுக எம்பி சசிகலா புஷ்பா மீது நிர்வாண மசாஜ் புகார் கொடுத்த அவரது வீட்டு பணிப்பெண்கள் தங்களது புகாரை திடீரென வாபஸ் பெற்றுள்ளனர். ஒருசிலரின் நெருக்கடியினால்தான் தாங்கள் புகார் கொடுத்ததாக அந்த பணிப்பெண்கள் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவுக்கும், திமுக எம்பி திருச்சி சிவாவுக்கும் இடையே டெல்லி விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு கைகலப்பு நடந்தது. இந்த சம்பவம் குறித்து சசிகலா புஷ்பாவிடம் விசாரணை செய்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அவரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் பணிப்பெண்களான பானுமதி மற்றும் ஜான்சிராணி ஆகியோர் தூத்துக்குடி போலீசில் புகார் ஒன்றை கொடுத்தனர். அதில் சசிகலா புஷ்பா வீட்டில் பணிபுரிந்த போது நிர்வாண நிலையில் மசாஜ் செய்ய வேண்டும் என துன்புறுத்தியதாகவும், சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகனும் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் தன்னை பழிவாங்குவதற்காக கொடுக்கப்பட்ட பொய்ப்புகார் என்று சசிகலா புஷ்பா தெரிவித்திருந்தார்.

இந்த புகார் காரணமாக சசிகலாபுஷ்பா கைதாகும் நிலை ஏற்பட்டதால் அவர் சுப்ரீம் கோர்ட் வரை சென்று கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார். இந்நிலையில் ஜெயலலிதா மரணம் அடைந்து, அதிமுகவில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது. தற்போது புகார் கொடுத்த பணிப்பெண்கள் இருவரும் தங்கள் புகாரை வாபஸ் பெற்றது திடீர் திருப்பமாக கருதப்படுகிறது.

More News

பிரபல அரசியல் தலைவருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 65வது பிறந்த நாளை குடும்பத்தினர் மற்றும் திமுக தொண்டர்களுடன் கொண்டாடி வருகிறார். அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் பிற அரசியல் கட்சி தலைவர்கள், திமுக தொண்டர்கள்ள் வாழ்த்து கூறி வருகின்றனர்...

திமுக செயல்தலைவர் மு.கஸ்டாலின் பிறந்த நாள். கருணாநிதி, அன்பழகனிடம் வாழ்த்து பெற்றார்.

திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று 65வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திமுக தொண்டர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்...

ரிலையன்ஸ் ஜியோ-சாம்சங் கூட்டணியில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம்

இந்தியாவில் செல்போன் உபயோகித்து வரும் பெரும்பாலானோர் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை 2ஜி தொழில்நுட்பத்தையே பயன்படுத்தி வந்தனர். ஒருசிலர் மட்டுமே 3ஜி தொழில்நுட்பத்தை உபயோகித்து வந்தனர்...

விஜய் 61 படம் இளையதளபதியின் மூன்று முகமா?

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்...

ராணி எலிசபெத்துடன் கைகுலுக்கிய கமல்

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா நேற்று மாலை லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் நடைபெற்றது. இங்கிலாந்து ராணி இரண்டாம்  எலிசபெத் துவக்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட முக்கிய விருந்தினர்களில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ஒருவர் என்பதை நேற்று பார்த்தோம்...