முடிந்தது 4 ஆண்டுகால சிறைவாசம்… சசிகலா விடுதலை!

  • IndiaGlitz, [Wednesday,January 27 2021]

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்த அவரிடம் விடுதலை செய்யப் படுவதற்கான கோப்புகளில் சிறைத்துறை நிர்வாகிகள் கையெழுத்து வாங்கியதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவருக்கு கடந்த 20 ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரு பவுரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் இவருக்கு மூச்சு திணறல் இருப்பதாகக் மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து கடந்த 21 ஆம் தேதி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் சசிகலாவிற்கு கொரோனா இருப்பது உறுதிச் செய்யப்பட்டது.

இதையடுத்து கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. முதலில் நுரையீரல் தொற்று பாதிப்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவர் உடல் நலம் தேறி வந்தார். இதனால் நேற்று அவர் சாதாரண வார்டிற்கும் மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இன்றுடன் சசிகலாவின் சிறை தண்டனை முடிவடைகிறது. இதனால் விடுதலை ஆகும் கோப்பில் அவரிடம் கையொப்பம் பெறப்பட்டவுடன் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருடன் சிறை தண்டனை பெற்ற இளவரசி வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி விடுதலையாவார் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. மேலும் ஏற்கனவே தண்டனை காலம் முடிந்து அபராதத் தொகை செலுத்தாத காரணத்தினால் சிறையில் இருக்கும் சுதாகரன் நேற்று மாலை வரை அபராதம் செலுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அவருடைய விடுதலை கேள்விக்குரியாக மாறி இருக்கிறது.

More News

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என நேற்றே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று முன்னர் சிவகார்த்திகேயனின்

விஜய் அரசியலுக்கு வரவேண்டாம்: எஸ்.ஏ.சி அதிரடி பேட்டி!

தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென விஜய்யின் பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்

ரிலீஸ் ஆன 16 நாட்களில் ஓடிடியில் 'மாஸ்டர்! அதிரடி அறிவிப்பு

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது என்பதும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு

குட்டித்தல' மாஸ் புகைப்படத்திற்கு எஸ்.ஜே.சூர்யாவின் ரியாக்சன்!

தல அஜித்தின் மகன் குட்டித்தல ஆத்விக் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் அஜித்தின் மனைவி ஷாலினி கலந்துகொண்ட

சமநிலைக்கு இப்படி ஒரு விளக்கமா? வைரலாகும் இளம் நடிகையின் யோகா புகைப்படம்!

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது தற்போது ஹிந்தியில் கால் பதித்து இருக்கும் இளம் நடிகை ரகுல்ப்ரீத் சிங். இவர் வொர்க் அவுட் மற்றும் யோகாவில் அதிக நாட்டம் உள்ளவர்.