ஓரளவுக்குத்தான் பொறுமை. அதற்கு மேல் செய்ய வேண்டிதை செய்வோம். சசிகலா
- IndiaGlitz, [Saturday,February 11 2017]
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மங்கிக்கொண்டே வருவதாக கூறப்படும் நிலையில் அவரது தரப்பு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. போதாக்குறைக்கு ஓபிஎஸ் அணியும் வலுத்து வருவதால் சசிகலா சற்று முன்னர் போயஸ் கார்டன் இல்லத்தில் தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சியுடன் பேசினார். அவர் பேசியதாவது:
ஜெயலலிதா தற்போதும் நம் மத்தியில் இருக்கிறார். அவர் கட்சியில் உள்ள புல்லுறுவிகளை அடையாளம் காட்டி வருகிறார். அதிமுக ஒரு எஃகு கோட்டை, அதை யாரும் அசைக்க முடியாது. ஜெயலலிதாவும் நிறையப் போராட்டங்களைச் சந்தித்துத்தான் கட்சியை நடத்தினார். அதேபோல் நமக்கும் தற்போது சோதனை வந்திருக்கிறது. இருப்பினும் சோதனையை வென்று காட்டுவோம்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து கொஞ்சம் அமைதி காக்கிறோம். ஓரளவுக்குத்தான் பொறுமை. அதற்கு மேல் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதைச் செய்வோம்' இவ்வாறு சசிகலா கூறினார்.,