அமமுக-வை ஆதரிக்காத  சசிக்கலா...! உண்மையை போட்டுடைத்த சி.ஆர். சரஸ்வதி....!

  • IndiaGlitz, [Thursday,March 18 2021]

டிடிவி தினகரன் அவர்களின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு, சசிகலா வெளிப்படையாக ஆதரவாக தராதது குறித்து அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி பிபிசி ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதிமுக-வில் சில பிரச்சனைகள் காரணமாக தினகரன் அவர்கள் அதிலிருந்து பிரிந்து, அமமுக என்ற கட்சி ஒன்றை துவங்கினார். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் அமமுக ஓட்டுகள் பிரிந்ததால், அதிமுக தோல்வியை சந்தித்தது. ஆனால் தினகரன் கட்சி 5.5% வாக்குகளை பெற்றது. பின்பு சென்ற 2019-உள்ளாட்சி மன்ற தேர்தலில், இன்னும் கணிசமான அளவு அதிக வாக்குகளை பெற்றது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். இக்காரணத்தால் தினகரன் சட்டசபை தேர்தலில் களமிறங்க தீவிரமுயற்சிகளை எடுத்து வந்தார். சசிகலா சிறையிலிருந்து திரும்பியதும், கட்சிக்கு மிக ஆதரவு தருவார் என கட்சியினர் சார்ப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலா அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகுவதாகவும், அமமுக கட்சி சார்பாக தமது பெயரையும், புகைப்படங்களையும் பயன்படுத்தக்கூடாது என்றும் அண்மையில் தெரிவித்திருந்தார்.

 

இதற்குப்பின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் தீவிரம் காட்டினார் தினகரன். அதிமுக கூட்டணிக்கு கட்சியின் பெரும் தலைகள் ஒத்துப்போகாததால், முயற்சியை கைவிட்டார். மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் வெளிப்படையாக சசிகலா அவர்கள், தினகரனுக்கு ஆதரவு கொடுக்காததும், கட்சி குறித்து பேசாததும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் தினகரன் அவர்கள் மானசீகமாக, சசிகலாவின் ஆதரவு எங்களுக்குத்தான் என்று அண்மையில் கூறியிருந்தார்.

அமமுக-விற்கு ஆதரவு தெரிவிக்காதது குறித்து, சி.ஆர்.சரஸ்வதி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனிக்கட்சியை நாங்கள் துவங்கிவிட்டதால், தினகரன் அவர்கள் அதிமுக மீது உரிமை கோர இயலாது. சசிகலாவால் அவ்வழக்கை தொடர்ச்சியாக நடத்தி வெற்றிபெற வைக்க இயலும். ஆனால் இரட்டை இலை தற்போது பணம் சம்பாதிக்க மட்டுமே அதிகாரமுள்ளவர்கள் மற்றும் வில்லன்களின் கையில் உள்ளது. அமமுக-விற்கு சசிகலா ஆதரவு தந்தால், அதிமுக மீதான உள்ள உரிமை போய்விடும் என்பதால் சற்று விலகி இருக்கிறார். அதிமுக கட்சியின் மீது தற்போது சட்டப்படி நடவடிக்கைகள் நடந்து வருவதால் தான் சின்னம்மா எங்கள் கட்சியை விட்டு விளக்கியுள்ளார் என சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.


 

More News

தோஷம் கழிக்க 13 வயது சிறுவனுடன் திருமணம்… பெண் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு!

திருமணம் ஆகாமல் இருக்கும் ஆணோ, பெண்ணோ தங்களுக்கு ஏதோ தோஷம் இருக்கிறது என்பதை முழுமையாக நம்பிவிடுகின்றனர்.

தஞ்சையில் மேலும் ஒரு  பள்ளியில் கொரோனா பாதிப்பு!  

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் மகளிர் பள்ளி ஒன்றில் கடந்த வாரம் ஒரு மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கமலை அநாகரிகமாக பேசிய  செந்தில் பாலாஜி..! வலுக்கும் எதிர்ப்புகள்...!

திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் குறித்து அவதூறாக பேசிய கருத்துக்கள்

சிம்ரனை அடுத்து 'அந்தகன்' படத்தில் இணைந்த பிரபல ஹீரோயின்!

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அந்தாதூன்' என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான 'அந்தகன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இவர்கள் தான் பாஜகா-வின்  பரப்புரையாளர்கள்...!  வெளியான லிஸ்ட்...!

ஏப்ரல்-6-ஆம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரியில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்காகவும்,