நம்ம தலையெழுத்த நம்ம தாண்ட எழுதணும்: 'கொம்பு வச்ச சிங்கம்டா' டிரைலர்

  • IndiaGlitz, [Friday,September 24 2021]

சசிகுமார் நடிப்பில் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

சசிகுமார் ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள இந்த படத்தில் சூரி, மகேந்திரன், இந்தர் குமார், ஹரிஷ் பெராடி, உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கிராமத்துப் பின்னணி காட்சிகள் இருப்பதால் நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு,

குறிப்பாக இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வசனங்களும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’விதி யார் தலையில் என்ன எழுதி இருக்கு என்று யாருக்கு தெரியும்’

’நம்ம தலையெழுத்து நம்ம தான்டா எழுதணும், எவனுக்கும் அந்த உரிமையை விட்டுக் கொடுக்க கூடாது’

’இந்த ஊரில் வாழ்ற வரைக்கும் அது நம்ம ஆட்டமாத்தான் இருக்கணும்’

’ஒரு ஆளு முகத்தை பார்த்த உடனே நல்லவன் யார்? கெட்டவன் யார் என்று முன்னாடி எல்லாம் சொல்லலாம், ஆனா இப்ப முகத்தைப் பார்த்து நல்லவன் யாரு? கெட்டவன் யாரு? என்று சொல்ல முடியாது எல்லாரும் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க, இனி இவங்களோட தான் நாம வாழ்ந்தாகனும்’,

’எத்தனை சூது கவ்வினாலும் தர்மம் வெல்லும்’ ஆகிய வசனங்களை கூறலாம்

திபு நினன் தாமஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவும், டான்போஸ்கோ படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை இந்தர் குமார் தயாரித்துள்ளார்.

ஏற்கனவே சசிகுமார் மற்றும் எஸ்ஆர் பிரபாகரன் இணைந்த ’சுந்தரபாண்டியன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் அதே வெற்றியை ’கொம்பு வச்ச சிங்கம்டா’ படமும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

என்னுடைய ராஜா இவர்தான்: மகனின் பெயரை அறிவித்த பிக்பாஸ் சாண்டி!

பிரபல நடன இயக்குனரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சாண்டி மாஸ்டருக்கு ஏற்கனவே லாலா என்ற பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது

யார் இந்த சாத்தான் ரைடர்ஸ்: 'வலிமை' வினோத் எடுத்த வித்தியாசமான கதை!

இயக்குனர் எச் வினோத் படம் என்றாலே வித்தியாசமாக இருக்கும் என்றும் 'சதுரங்க வேட்டை' மற்றும் 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய இரண்டு படங்களே இதற்கான சாட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.

15 வருட உழைப்புக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்… வைரம் கிடைத்த குஷியில் நெகிழ்ந்த ஊழியர்!

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் பல ஆண்டுகளாக வைரம் தோண்டும் சுரங்களில் வேலைப்பார்த்து வருகிறார்.

ரோட்டுக் கடையில் பீட்சா சாப்பிட்ட அதிபர்… காரணத்தைக் கேட்டு அரண்டுபோன நெட்டிசன்ஸ்!

அமெரிக்கா மாகாணம் நியூயார்க்கில் தற்போது ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

அஜித் அனுமதியுடன் தான் இதை செய்கிறேன்: மேரல் யாஸர்லூ 

சமீபத்தில் அஜித்தை சந்தித்த உலகை சுற்றிய இளம்பெண் மேரல் யாஸர்லூ, அஜித்தின் அனுமதியுடன் இந்த புகைப்படத்தை வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.