close
Choose your channels

நம்ம தலையெழுத்த நம்ம தாண்ட எழுதணும்: 'கொம்பு வச்ச சிங்கம்டா' டிரைலர்

Friday, September 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகுமார் நடிப்பில் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

சசிகுமார் ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள இந்த படத்தில் சூரி, மகேந்திரன், இந்தர் குமார், ஹரிஷ் பெராடி, உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கிராமத்துப் பின்னணி காட்சிகள் இருப்பதால் நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு,

குறிப்பாக இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வசனங்களும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’விதி யார் தலையில் என்ன எழுதி இருக்கு என்று யாருக்கு தெரியும்’

’நம்ம தலையெழுத்து நம்ம தான்டா எழுதணும், எவனுக்கும் அந்த உரிமையை விட்டுக் கொடுக்க கூடாது’

’இந்த ஊரில் வாழ்ற வரைக்கும் அது நம்ம ஆட்டமாத்தான் இருக்கணும்’

’ஒரு ஆளு முகத்தை பார்த்த உடனே நல்லவன் யார்? கெட்டவன் யார் என்று முன்னாடி எல்லாம் சொல்லலாம், ஆனா இப்ப முகத்தைப் பார்த்து நல்லவன் யாரு? கெட்டவன் யாரு? என்று சொல்ல முடியாது எல்லாரும் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க, இனி இவங்களோட தான் நாம வாழ்ந்தாகனும்’,

’எத்தனை சூது கவ்வினாலும் தர்மம் வெல்லும்’ ஆகிய வசனங்களை கூறலாம்

திபு நினன் தாமஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவும், டான்போஸ்கோ படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை இந்தர் குமார் தயாரித்துள்ளார்.

ஏற்கனவே சசிகுமார் மற்றும் எஸ்ஆர் பிரபாகரன் இணைந்த ’சுந்தரபாண்டியன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் அதே வெற்றியை ’கொம்பு வச்ச சிங்கம்டா’ படமும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.