சசிகுமாரின் 'கொம்பு வச்ச சிங்கம்' லேட்டஸ்ட் அப்டேட்!

  • IndiaGlitz, [Friday,May 10 2019]

சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு 'அசுரவதம்', இந்த ஆண்டு 'பேட்ட' ஆகிய திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் 'நாடோடிகள் 2', 'கொம்பு வச்ச சிங்கம்' மற்றும் 'கென்னடி கிளப்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 'நாடோடிகள் 2' மற்றும் 'கென்னடி கிளப்' படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் தற்போது 'கொம்பு வச்ச சிங்கம்' படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் படப்பிடிப்பின் இறுதி நாளன்று எடுக்கப்பட்ட குரூப் போட்டோகளையும் சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்துள்ளனர்.

'கொம்பு வச்ச சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை அடுத்து விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளது. 'கொம்பு வச்ச சிங்கம்' படம் உள்பட சசிகுமாரின் மூன்று படங்களும் அடுத்தடுத்து இவ்வாண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகுமார், மடோனா செபாஸ்டியன், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே 'சுந்தரபாண்டியன்,' இது கதிர்வேலன் காதல்', 'சத்ரியன்' போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவில், டான் போஸ்கோ படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரேதான் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


 

More News

விஷாலின் 'அயோக்யா' ரிலீஸில் திடீர் பிரச்சனை!

விஷாலின் 'அயோக்யா' திரைப்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி

அயோக்யா ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்?

விஷால் நடித்த 'அயோக்யா' திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இந்த படத்திற்கான முதல் நாள் காட்சிகளுக்குரிய டிக்கெட்டுக்களும் முன்பதிவுகள் செய்யப்பட்ட நிலையில்

பகத் பாசில் - நஸ்ரியா காதலுக்கு நான் தான் காரணம்: பிரபல நடிகை

அஞ்சலி மேனன் இயக்கிய மலையாள திரைப்படமான 'பெங்களூர் டேய்ஸ்' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி கேரளாவில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் சூப்பர் ஹிட்டானது

16 வயது சென்னை சிறுமியை திருமணம் செய்து நண்பருக்கு விருந்தாக்கிய வாலிபர்!

சென்னை திரு.வி.க நகரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் காதலித்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகிய நிலையில் பெற்றோர்களுக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.

காமெடி சென்ஸ்சுக்கு அளவே இல்லை: போலீஸ் புகார் குறித்து பார்த்திபன் விளக்கம்

நடிகர், இயக்குனர் பார்த்திபனின் உதவியாளர் ஜெயங்கொண்டான் என்பவர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக இன்று போலீஸ் புகார் அளித்தார். இதுகுறித்த செய்தி கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும்இடம்பெற்றது.