சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,February 19 2020]

அஜித் நடித்த விவேகம், விஸ்வாசம் தனுஷ் நடித்த பட்டாஸ்’ திரைப்படங்களை சமீபத்தில் தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தற்போது தனுஷ் நடிப்பில் ’ராட்சசன்’ பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரிக்க உள்ளது.

இந்த நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் முதல் முறையாக ஒரு கன்னட திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்க உள்ளார்.

’ஷிவானா 123’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. இந்த பூஜையில் பெங்களூரு கமிஷனர் பாஸ்கர் ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தை ரவி அரசு என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே அதர்வா நடித்த ’ஈட்டி’, ஜிவி பிரகாஷ் நடித்த ’ஐங்கரன்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரண்ராஜ் இசையில் சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில் ஹரிஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
 

More News

'காத்து வாக்குல ரெண்டு காதல்': சமந்தாவின் கேரக்டர் என்ன?

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல சுவீடன் நாட்டு தொழிலதிபர் கோவை ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கிறார் – பொதுமக்கள் அதிர்ச்சி

சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான கிம் சில மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்துள்ளார்

பின்னடைவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்: காதல் தோல்வி குறித்து தர்ஷன்

பிக்பாஸ் புகழ் தர்ஷன், சமீபத்தில் நடிகை சனம்ஷெட்டியை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தமும் செய்துவிட்டு அவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக கூறப்பட்டது

இரண்டு இளைஞர்களை காதலித்த இளம்பெண்: கட்டிப்பிடித்த உருண்ட காதலர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் அருகே ஒரு இளம்பெண் ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்களை காதலித்து வந்ததால் இரண்டு காதலர்களும் கட்டிப் பிடித்து உருண்டு சண்டை

சேற்றில் விழுந்து இறந்த குட்டி யானை- 2 நாட்களாக அதே இடத்தில் நிற்கும் தாயின் பாசப் போராட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேயிலைத் தோட்ட பகுதியில் கடந்த 17 ஆம் தேதி காலை, யானைகள் கூட்டமாக நின்று கொண்டு பிளிறிக் கொண்டிருந்தன