'பாகுபலி' மகிழ்மதி நாட்டின் பெயரில் இயக்கம் ஆரம்பித்த நடிகரின் மகள்!

  • IndiaGlitz, [Sunday,August 02 2020]

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர் என்பதும் அவர் விரைவில் ஒரு இயக்கம் ஆரம்பித்து சமூக சேவை செய்யவிருப்பதாகவும் வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் தனது இயக்கத்தின் பெயரை அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

திவ்யா சத்யராஜ்‌ மக்களிடம்‌ நன்கு அறிமுகமான ஊட்டச்சத்து நிபுணர்‌. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாகப்‌ பெரும்‌ இழப்புகளைச்‌ சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்‌ என்று சமீபத்தில்‌ விவசாய அமைச்சரிடம்‌ திவ்யா கேட்டுக்‌ கொண்டார்‌. திவ்யா சத்யராஜ்‌ “மகிழ்மதி' என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்‌.

இந்தியாவில்‌ ஒர்‌ ஆண்டின்‌ கணக்கின்படி பத்து மில்லியன்‌ திருமணங்கள்‌ நடைப்பெறுகின்றன. அத்திருமணவிழாக்களில்‌ பரிமாறப்படும்‌ முப்பது விழுக்காடு உணவு விணாகின்றன. உணவும்‌, ஊட்டச்சத்தும்‌ வசதியுள்ளவர்களுக்கு மட்டுந்தான்‌ என்பது நியாயம்‌ இல்லை. வறுமைக்கோட்டிற்குக்‌ கீழ்‌ உள்ள குடும்பத்தினரும்‌, குழந்தைகளும் கொரோனா போன்ற தொற்றுக்களில்‌ இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமாயின்‌ அவர்களுக்கும்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு தேவை.

“மகிழ்மதி இயக்கம்‌' அரசியல்‌ கட்சியோ, சாதி, மதம்‌ சார்ந்த அமைப்போ கிடையாது. வறுமைக்கோட்டிற்குக்‌ கீழ்‌ இருக்கும்‌ பகுதிகளில்‌ ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்க உருவாக்கப்பட்ட ஓர்‌ இயக்கம்‌ கொரோனா ஊரடங்கு நேரத்தில்‌ வேலைகளுக்குச்‌ செல்ல முடியாமல்‌ வறுமையில்‌ வாடும்‌ குடும்பங்களுக்குத்‌ தரமான உணவு வழங்குகிறோம்‌. கொரோனா நேரத்தில்‌ மட்டும்‌ இல்லாமல்‌ தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை இவ்வியக்கம்‌ மேற்கொள்ளும்‌.

மகிழ்மதி இயக்கம்‌' என்‌ கனவு. என்‌ இயக்கத்திற்கு ஒரு நல்ல தமிழ்ப்பெயர்‌ வைக்க வேண்டும்‌ என்று யோசித்தபோது, 'மகிழ்மதி' என்ற பெயர்‌ தோன்றியது. என்‌ அம்மா பெயர்‌ 'மகேஸ்வரி' அவர்‌ பெயரின்‌ முதல்‌ பாதியை என்‌ இயக்கத்தின்‌ பெயரில்‌ இணைக்க வேண்டும்‌ என்பது என்‌ ஆசை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

More News

ஜீன்ஸ் பேண்டிற்குள் புகுந்த பாம்பு: 7 மணி நேரம் நின்று கொண்டே இருந்த வாலிபரால் பரபரப்பு

வாலிபர் ஒருவரின் ஜீன்ஸ் பேண்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டதால் அந்த வாலிபர் பாம்பு வெளியே வரும் வரை ஏழு மணி நேரம் நின்று கொண்டே இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திடீரென கிளம்பிய இளம்பெண்ணின் BMW கார்: நாய்க்குட்டியால் ஏற்பட்ட விபத்து

டெல்லியில் இளம் பெண் ஒருவர் BMW காரில் உட்கார்ந்திருந்த நிலையில் திடீரென அவருடைய நாய்க்குட்டி துள்ளி குதித்ததால் அதிர்ச்சி அடைந்து தவறுதலாக ஆக்சிலரேட்டரை மிதித்தார்.

காவல்துறையில் முதல் லெஸ்பியன் ஜோடி: நீதிமன்றம் சென்று உரிமையை நிலையாட்டிய இளம்பெண்கள்

குஜராத் காவல் துறையை சேர்ந்த இரண்டு பெண்கள் தங்களை லெஸ்பியன் என்று அறிவித்துக்கொண்டதோடு அதை நீதிமன்றத்திலும் சென்று அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 

சுஷாந்தை அடுத்து பெண் தொகுப்பாளினி தற்கொலை: மன அழுத்தம் காரணமா?

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் அவர்கள் மன அழுத்தம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பாதிப்பு இன்னும் மீளாத நிலையில்

இயக்குனராகும் நடிகர்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் 

தமிழ் நடிகர் ஒருவர் இயக்குனராகியுள்ள நிலையில் அவருடைய முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்