close
Choose your channels

முதல்வருக்கு நன்றி கூறிய பிரபல நடிகரின் மகள்!

Saturday, February 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா, அட்சய பாத்திரம் என்ற அமைப்பின் விளம்பர தூதராக உள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து பள்ளி குழந்தைகளுக்கு காலையில் ஊட்டச்சத்து உணவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதன்படி இன்று அட்சய பாத்திரம் அமைப்புக்கு புதிய இடம் தமிழக அரசால் கொடுக்கப்பட்டு அதற்கு முதல்வர் அடிக்கல்லும் நாட்டியுள்ளார். இதுகுறித்து திவ்யா தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அட்சய பாத்திரா அமைப்பு உலக புகழ்பெற்ற மதிய உணவு திட்டம் ஆகும். இதற்கு ஏற்கனவே நகருக்கு வெளியே ஒரு உணவு தயாரிப்பு கூடம் உள்ளது. நகருக்குள் ஒரு உணவு தயாரிப்பு கூடம் இருந்தால் வசதியாக இருக்கும் என்ற நோக்கத்தில் அமைச்சர் செங்கோட்டையனிடம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இதை ஒரு கோரிக்கையாக வைத்தேன். அவரும் முதல் அமைச்சரிடம் கோரிக்கையை சேர்ப்பதாக கூறினார். முதல்வருக்கும் கோரிக்கை அனுப்பினோம்.

குழந்தைகளின் உடல்நலத்திற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க கூடாது என்ற நோக்கில் அவர் இதற்கு அனுமதி அளித்ததுடன் இடமும் வழங்கி அடிக்கல் நாட்டி இருக்கிறார். இதற்காக தமிழக அரசுக்கும் முதல் அமைச்சருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.